Thursday, February 22, 2018

திமுக என்று ஒரு கட்சி இருந்ததா..?


தமிழ்நாட்டில் திமுக என்று ஒரு கட்சி இருந்ததா..?

என்று கேட்கும் அளவிற்கு நான் திமுகவை ஒழித்துவிடுவேன் --சசிகலா 15-2-17
கூவத்தூர் MLA க்கள் சிறைவைப்பு முகாமில் பேசியது...

1960 களில் ராஜாஜி ..திமுகவை மூட்டை பூச்சிபோல் நசுக்குவேன்..என்று கொக்கறித்தார்..

1967 ல் பக்தவசலம் திமுகவுக்கு 6000 அடி குழி தோண்டி புதைச்சிடுவோம்..
என்று பூச்சாண்டி காட்டினார்..

1971 ல் காமராஜர் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்..என ஆணவம் காட்டினார்...

1975 ல் மிசாவை காட்டி
மிரட்டினார் இந்திரா..
"மிசா"ன்னு பயமுறுத்தினா
தமிழ்நாட்டுகுள்ள வர
"விசா" வாங்கி வரவேண்டும் என
கலைஞர் பதிலுரைத்தார்..

1977 ல் MGR திமுகவுக்கு கல்லறை கட்டுவேன்...என தொழிலை மாற்றி பேசினார்..

1982 ல் ஜெயலலிதா ..கருணாநிதியின் விலா எலும்பை முறிப்பேன்..ரத்த காட்டேரியாய் கொக்கரித்தார்..

மீண்டும்..1991ல் ஜெயலலிதா ..நான் பாப்பாத்திதான்..!
நானே நிரந்தரம்..
என்னை ஆட்டவோ..அசைக்கவோ..
முடியாதுன்னு கொக்கரித்தார்..
96 ல் MLA ஆக கூட முடியாமல் திமுக வின் தொண்டன் சுகவனத்திடம்
தோற்றார்..

நான் மேலே குறிப்பிட்ட தலைவர்களுக்கு ..
சசிகலாவை ஒப்பிட்டு பேச நான் நாகரீகமற்றவன் இல்லை..

சமீபத்தில்கூட பொண.ராதாகிருஷ்ணன் போகி தீயில் திமுக வை போட்டு கொளுத்துங்கள்..
வாய் கொழுப்பெடுத்து உளறியபோது..
திமுக வை எவனும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று செருப்படி கொடுத்தார் தளபதி...

திமுக வரலாறு தெரியுமா..
பொதுமேடையில் உலக தலைவர்களில் ஒருவரான இந்திராவையே
1976 மிசா கால கொடுமைகளுக்காக ..
1980 ல் மன்னிப்பு கேட்கவைத்த இயக்கம் திமுக..

திமுகவை அழிப்பேன்..ஒழிப்பேன் சொன்னவர்கள் எல்லாம்..
மண்ணுக்குள்ள போயிருக்காங்க ...அல்லது
உன்னைப்போல் கம்பிக்குள்ள போயிருக்காங்க..

எங்க கட்சி அலுவலகத்தை
முன்னறிவிப்பு இல்லாம..ஒரு நாள் காலைல தலைவர் பேராசிரியர் இருக்கும்போதே ..MGR தன் அதிகாரிகள் மூலமாக காலி செய்ய சொல்லி பொருட்களை தூக்கி போட்டார்..அதன் பிறகே
அறிவாலயம் கண்டார் கலைஞர்..!!

இன்று MGR வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தில..
வாழ யாருமே இல்லாம சிதிலமடைஞ்சு இருக்கு..

இன்று போயஸ் தோட்டத்திலும் அதே நிலை..இனி யார் அங்கே..?

சிவன் சொத்து குலநாசம்னு கிராமத்துல சொல்வதுண்டு..

ஆனால் திமுக வை தொட்டவனெல்லாம் ..
கெட்டான்..
என் தலைவருக்கும்..
தளபதிக்கும்..
கட்டிடகலையில் நல்ல ரசனை..

நிறைய மணிமண்டபம் கட்டி திறந்து
வைத்துள்ளார்கள்..

ஆணவ கொக்கரிப்புகளாளேயே  ஒன்றும் செய்யமுடியவில்லை விதைகள் எம்மாத்திரம்..!

Jayakumar Ariyalur