Monday, January 31, 2011

தமிழ் பேரு வெச்சா தப்புங்களா ? என அழுதார்...

                                                             (சிறப்பு மாணவர்கள் வள மையம் )
அன்புள்ள நண்பர்களுக்கு,

என் நெஞ்சத்தினை பாதித்த ஒரு உண்மை சம்பவத்தினை உங்களுக்காக கண்ணீரோடு காணிக்கையாக்குகிறேன்.

கடந்த திங்களன்று எங்கள் ஒன்றியத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் SSA(Sarva Shiksha Abhiyan ) மூலம் பெற்றோர் ஆசிரியர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதன் நோக்கம் அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்துவதும் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் பள்ளிகளில் ஏற்பட்டிருக்கும் சிறு சிறு பழுதுகளை சீரமைப்பது பற்றிய பயிற்சி வகுப்பு . ஒன்றியத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலிருந்தும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .

 நானும் சேர்மனான எனது மனைவியும் துவக்க விழாவினை துவக்கிவிட்டும் ,சிறப்புரை ஆற்றிவிட்டும் பின் அலுவலக வேலை காரணமாக பயிற்சி தொடங்கிய சில மணித்துளிகளில் கிளம்ப வேண்டியதாயிற்று . அதுசமயம் SSA அமைப்பின் அவினாசி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் எங்களிடம் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் படிக்கும் அரசு பள்ளியை பற்றி பேசி இருந்தார்.எங்களுக்கு சட்டென்று அந்த பள்ளியைப்பற்றி தோன்ற உடனே அவரை அழைத்துக்கொண்டு அப்பள்ளியை பார்வையிட சென்றோம். அரசு நிதி கட்டிடம் கட்ட மட்டுமே சரியாகப்போனதால் ,தண்ணீர் தொட்டி மற்றும் அக்குழந்தைகளுக்கென நவீன கழிப்பறை கட்டித்தருமாரும் கேட்டுக்கொண்டார் .  சரி என்னால் முடிந்த அளவில் மிக விரைவாக மாவட்ட ஆட்சியரிடம் பேசி அமைச்சர் நிதி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி குழந்தைகளை காண உள்ளே சென்றோம் . 

அங்கே மொத்தம் 22 குழந்தைகள் படித்துக்கொண்டிருந்தனர் . நாங்கள் உள்ளே சென்றதும் சில குழந்தைகள் வணக்கம் கூறி வரவேற்றனர் . சில குழந்தைகள் மட்டுமே அவர்கள் தங்களுக்கு தெரிந்தவாறு என்னிடம் அறிமுகம் செய்துகொண்டனர். அதில் இருவர் தூங்கிக்கொண்டிருந்தனர்.ஒரு பையன் விசும்பிகொண்டிருந்தவாரே அங்குமிங்குமாக சுற்றிக்கொண்டிருந்தான் . நானும் என்னுடன் வந்தோரும் ஒவ்வொரு குழந்தைகளிடமும் நலம் விசாரித்தோம். அப்போது அந்த பள்ளியின் ஆசிரியர் அக்குழந்தைகளிடம் என் மனைவி சாந்தியை காட்டி இவர் யார் என்று கேட்டார்.அக்கா,அம்மா, புது டீச்சர் என்று பல பதில்கள் வந்த வேளையில் சாந்தி என்று அழுத்தமான குரலில் சத்தமான பதில் வர அனைவரும் ஆச்சர்யத்துடன் அந்த மனவளர்ச்சி குன்றிய 16 வயது மதிக்கத்தக்க ஒரு மாணவனை பார்த்து இவங்களை எப்படி தெரியும் என்று கேட்க "தெரியும்" என்று மட்டுமே மறுபடியும் பதில் சொன்னான். உன் பெயர் என்ன என்று கேட்டவுடன் நான்கு வயது பாலகன்போல திக்கிதிக்கி தன பெயர் தமிழரசன் என்று கூறினான் . என்னுடன் மிக இலகுவாக பலகினான். புன்முறுவல் கொண்ட முகத்துடனே காணப்பட்டான். அப்போது என்னுள்ளே பதினாறு வயதினிலும் எந்த கவலையும் இல்லாத இந்த சிறுவனின் நிலை கண்டு ஒருநொடி சந்தோசம் அடைவதற்குள் அவன் மீது இனம் புரியாத பரிவு ஏற்படத் துவங்கியது . அவன் உடல் வளர்ச்சிக்கு தகுந்த மன வளர்ச்சி இல்லாதது கண்டு மனம் சற்றே ஆதங்கப்பட்டது . இடையே தொழில்நுட்பத்தின் வரப்பிரசாதமான அலைபேசி இரண்டு மூன்று முறை ஒலித்தவாறே இருந்தமையால் நாங்கள் , உலகமே தெரியாமல் புது உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் அக்குழந்தைகளிடம் வருத்தத்துடன் விடைபெற்றோம் .
                                                                 (சிறப்பு மாணவர்கள் வள மையத்தில் குழந்தைகள் ) 
ஒருவாரம் கழிந்த பின்னர் நேற்று மாலை ஞாயிறுக்கிழமையாதலால் பனிச்சுமை சற்று குறைவாகவே இருந்தது . சுமார் நான்கு மணி அளவில் வழக்கமாக செல்லும் கட்சி அலுவலகத்திற்கு அருகில் உள்ள பேக்கரியில் டீ குடிக்க என் மாப்பிள்ளை பார்த்தி,மற்றும் கட்சி உடன்பிறப்புகள் இருவருடன் சென்றேன். டீ கடையில் வழக்கம்போல அரசியலும் சினிமாவும் கலந்த டீ கடை டேபிள் போலிருந்தது . அப்பொழுது கலைஞரின் இயற்பெயர் என்ன ? என்று ஒரு குரலொலிக்க , என்னை முந்திக்கொண்டு தட்சிணாமூர்த்தி என்று பில் கொடுத்துக்கொண்டிருந்த நாகராஜ் அண்ணன் சொன்னார் .அவர் வயது 46.பனியன் கம்பெனியில் வேலை செய்துகொண்டுள்ளார் .

 என்னைப்பார்த்ததும் வணக்கம் , எப்டி இருக்கீங்க ? சாந்தியும், வாரிசு கலைநிதியும் எப்டி இருக்காங்க ? போன வாரம் எதோ கீழ விழுந்துட்டாத தம்பி சொன்னா. "பாபு கொஞ்சம் பத்தரமா பாத்துக்கங்க.இல்லாட்டி பின்னாடி நம்ம பையனாட்ட ரொம்ப கஷ்டமாயிரும் ." என்றார் . எனக்கு நாகராஜ் அண்ணனை மட்டுமே தெரியும்.அவருடைய குடும்பம்,வருமானம் , இருப்பிடம் பற்றி அவ்வளவாக தெரியாது. நான் உடனே "ஏனுங்னா என்னாச்சுங்" என்றேன். பின்னர் அவர் கூறியதை கேட்டதும் என் இதயமே நொறுங்கிவிட்டது. அவர் என்ன சொன்னாரென்றால்,

"அதுங்க பாபு நம்ம பெரிய பைய ஆறு மாச கொழந்தையா இருக்கறப்போ தொட்டல்ல இருந்து கீழ விழுந்துட்டான் . எங்க மாமியாகாரி காத்து கருப்பு வந்தரகூடாதுன்னு கோடரியோட கொழுவ புடி இல்லாம தொட்லுக்கு கீழ வெச்சிருந்தாங்க.குழந்தை தல கரெக்டா கோடரி மேல விழுந்து தலைல அடி பட்டிருச்சு.நாங்களும் உடனே டாக்டர் கிட்ட காட்டி மருந்து மாத்திரையெல்லாம் குடுத்தோம். ஒரு ரெண்டு மாசத்துக்கு பையனோட தல கெட கொள்ளாமையே இருந்துது.யாரவது தொட்டா அழுவான். உடனே எங்க சொந்த பந்தமெல்லாம், "அப்பவே சொன்னோம்.கொழந்தைக்கு சாமி பேர் வெக்கலாமுனு . நீதான் தமிழ்நாடு,தமிழ்,தலைவர்னு தமிழ்ல பேர் வெச்ச.பாத்தியா இப்ப என்ன ஆச்சுன்னு." என்று என்னை குத்தம் சொன்னாங்க . 
                                                                       (சிறப்பு மாணவர்கள் வள மையத்தில்  தமிழரசன் )
ஏனுங்க தமிழ் பேரு வெச்சா தப்புங்களா என அழுதார் ?" ஒரு வருஷம் கழிச்சு , பையனுக்கு வலிப்பு வந்திருச்சு . உடனே ஸ்கேன் பாக்கணும்னு சொன்னாங்க.அப்பதான் தெருஞ்சுது , மூளைல அடிபட்டு நரம்புல சீல் கோர்த்திருக்கறதா பெரிய டாக்டர் சொன்னாரு.ஒண்ணுமே பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க . வேணா மாத்திர மருந்துல குடுத்து பாப்போம் .செரியாக வாய்ப்பு இருக்குன்னு சொன்னாங்க . இந்த பதினாறு வருசமா இன்னும் மாத்திரை சாப்டுட்டு தா இருக்கான்.

நான் உடனே பையன் பேர் என்னுங்க்னா ஸ்கூலுக்கு போரானுங்க்லா என்றேன். 

"ஆமாம்.இங்க தான் சிறப்பு குழந்தைகள் வள மையம் ஸ்கூல்ல படிக்கிறான் .பேரு தமிழரசன்.இப்ப கொஞ்சம் பரவா இல்லை .அப்பப்போ உங்க காலண்டர் ,விசிடிங் கார்டு,நோட்டீஸ்னு எதாவுத தந்தா ,பாத்து சாந்திய அடையாளம் கண்டு புடிப்பான் .

(அப்பொழுதுதான் தெரிந்தது நாம் பார்த்தது இவரின் மகனென்றும்,மனைவியின் பெயரை சரியாக சொன்னதன் காரணமும்).

மீண்டும் அவரே தொடர்ந்து " என்னோட ரெண்டாவது மகனுக்கும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் சந்திரசேகரோட பேர்தான் வெச்சிருக்கேன்" என்றவாறே சற்று கண்கலங்கி இந்தப்பையனுக்கு எந்தவொரு குறையுமில்லாமல் ஏழாவது படிப்பதாகச் சொன்னார் .

என்னோடு இருந்த மாப்பிள்ளை பார்த்திபனும் , கழக உடன்பிறப்புகளும் "நம்ம பார்த்த தமிழரசன் இவரோட பையனா..?சே பாவம் என்று நொந்தவாறே,இந்த காத்து,கருப்பு,சாமீ,பரிகாரம் இதெல்லாம் எவன் கண்டுபுடுச்சது" என்றவாறே அனைவரும் கலைந்தோம்.பிறகு வீட்டிற்கு சென்று மனைவி சாந்தியிடம் கூறியபோது ,அழத் தொடங்கிவிட்டாள் . அவளை ஆறுதல்படுத்தி காலையில் அந்த பையனை போட்டோ எடுத்து நான் ப்ளாக்ல இதைப்பத்தி எழுதுறேன்.இத படுச்சிட்டு யாரவது ஒருத்தராவது மாருவாங்க .நீ கவலைப்படாம காலேஜ் போ.என்று சொல்லிவிட்டு என் மாப்பிள்ளையையும் அழைத்துக்கொண்டு ,அந்த பள்ளிக்கு மீண்டும் சென்று அவர்களுடன் சற்றே கலந்து பேசிவிட்டும் , விளையாடிவிட்டும் இந்த புகைப்படங்களை எடுத்து வந்தேன்.

இதை வாசிப்பவர்கள் வெறுமனே படித்து விட்டும், பகிர்ந்து விட்டும் செல்லாமல் , மூட நம்பிக்கையின் முட்டாள்தனத்தினை அனைவருக்கும் எடுத்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

                                                                                 இறுக்கமான மனதுடன் 
உங்கள் நண்பன் பாபு 

Saturday, January 29, 2011

வாணி நி அரவாணி - மதிப்பிற்குரிய திருநங்கை


பல காலமாக அலி, பேடி, அரவாணி போன்ற சொற்களால் கேலியுடன் அழைக்கப்பட்டு சமூகத்தில் ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ வாழ முடியாமல் மன உளைச்சலுடன் சமூக மதிப்பு எதுவுமில்லாமல் தனிப்பட்ட சமுதாயமாக எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் கேளிக்கை நடனம் மற்றும் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தப்பட்டு வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் அவலத்தில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் பொதுவாகத் தமது குடும்பச் சூழலை விட்டு விலகி, அரவாணிகள் எனும் குழுமத்தில் கலந்து விடுகிறார்கள். இதுவே இவர்கள் சமூக நிலையாக இருக்கிறது.

மரபு ரீதியான இனப் பெருக்கத்தின் அடிப்படையிலான தொடர்ச்சி எதுவும் இல்லாமலேயே அரவாணிகள் சமூகம், தமது பாரம்பரியத்தை வரலாற்றோடு இனம் கொண்டு ஒரு சமூகத்தையும், தனித்துவமான குடும்ப அமைப்புகளையும், தனித்துவமான சடங்குகளையும், வாய்மொழி மரபுகளையும் பேணி வருகிறது. பல்வேறு தனித்துவம் கொண்ட வேறுபட்ட கூறுகளையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கொண்ட தேசமாய் விளங்கும் இந்தியா முழுக்க அரவாணிகள் சமூகம் தனக்கென ஒரு பொதுப் பண்பாட்டையும், பொது கலாச்சார சடங்குகளையும், பொது வழக்காற்றையும் கொண்டுள்ளது. பொதுவான வழக்காற்றிலிருந்து அரவாணிகள் வழக்காறு முற்றிலும் வேறுபட்டது.


ஆண்/பெண் என்ற சொல் மதம்/இனம் அல்லாமல் பாலியலை மட்டுமே குறிக்க பயன்படுத்தப்படுகிறது. அலிகளோ சராசரி ஆண்/பெண் போலன்றி மதம், இனம், மொழி கடந்து ஒடுக்கப்பட்டோர் என்ற வகையில் ஒன்றிணைந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருபவர்கள். அவர்கள் குறிப்பட்டதொரு மதம் சார்ந்து அழைக்கப்படுதல் ஜனநாயக அடிப்படையிலும், மொழியியலடிப்படையிலும் பொருந்தாது.

அரவாணிகள் என அழைக்கப் பட்டோரை திருநங்கைகள் எனப் பெயர் மாற்றம் செய்து அவர்களுக்கென தனி நல வாரியம் அமைத்து அதன் மூலம் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. மேலும் திருநங்கைகள் சமூக மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.

தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் மூலமாக திருநங்கைகளுக்கு நலத்திட்டம் வழங்கும் வகையில் 6 திருநங்கைகளுக்கு தலா இருபது ஆயிரம் மதிப்பீட்டில் கறவை மாடுகளும், 4 திருநங்கைகளுக்கு கலைத்தொழில் கருவிகள் வாங்கு வதற்கு தலா இருபது ஆயிரமும், 7 திருநங்கைகளுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.தேனி மாவட்டத்தில் 127 திருநங்கைகள் கண்டறியப் பட்டனர்.

சமூக நலத்துறையின் மூலமாக 58 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட் டுள்ளது. வருவாய்த்துறை மூலமாக 72 திருநங்கைகளுக்கு வடவீரநாயக் கன்பட்டியில் தலா 3 சென்ட் வீதம் வீட்டுமனை பட்ட வழங்கப்பட் டுள்ளது.

68 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகளும், பாரதி என்ற திருநங்கைக்கு முன்னோடி வங்கி யின் மூலம் கல்விக்கடனாக 21 ஆயிரம் ரூபாய், மகளிர் திட்ட மேம்பாட்டு நிறுவனத்தின் மூல மாக 5 சுய உதவிக்குழு ஆரம்பிக்கப் பட்டுள்ளது. 17 திருநங்கைகளுக்கு அரசு காப்பீட்டு திட்டத்தில் அடையாள அட்டை வழங்கப் பட்டுள்ளது

நேசம் புதுசு என்ற படத்தை கார்த்திக்குடன் இணைந்து இயக்கிய வேல்முருகன் பிறகு சில படங்களில் காமெடி நடிகராக வலம் வந்தார். சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் ஆசை தலைதூக்க ஆ‌க்சன், கட் சொல்ல முடிவெடுத்து இவர் இயக்கும் படத்தை ஜெய் கார்த்திக் மூவிஸ் தயா‌ரித்து படத்துக்கு வைத்த பெயர் திருநங்கை.

படத்தில் ஹீரோயினாக ஒரு திருநங்கையே நடிப்பதாக இருந்தது . இதற்காக கலாஷேத்ராவில் நடனம் பயிலும் ல‌க்சயா என்ற திருநங்கையை தேர்வு செய்யப்பட்டார் . திருநங்கையை கதாநாயகியாக்கி இதுவரை இந்தியாவில் படங்கள் வந்ததாக‌த் தெ‌ரியவில்லை. முதல் முறையாக அதை சாதிக்கப் போகிறது தமிழ் சினிமா என்ற ஆவலில் இருந்தோம் . ஆனால் ஒருவருடத்திற்கு மேலாகியும் படத்தைப்பற்றி எந்த செய்தியும் தெரியவில்லை . 

திருநங்கைகள் தங்கள் சொந்த முயற்சியினால் முன்னேற முயல்வதற்க்கு சமுதாயம் உதவ தவறுகிறது . மொத்தத்தில் திருநங்கைகளின் பிரச்சனைகளும், வாழ்க்கையின் கேள்விகளுக்கான விடைகள் இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கின்றன.

Friday, January 28, 2011

மகரஜோதி - கருமாதி - தேவச சதி


கேரள மக்களுக்கு ஓணம் மட்டும் சந்தோசம் இல்லை ஒவ்வொரு தமிழனின் சாவும் சந்தோசம் தான் .. கொதித்து போய் சொல்கிறார் சபரிமலை கூட்ட நெரிசலில் தன் தந்தை மற்றும் தங்கையும் காவு கொடுத்த தொப்பம்பட்டி தாமோதரன் கண்ணீருடன் ..........

அப்பாவை காணோம் அண்ணனை காணோம் பிள்ளையை காணோம் தம்பியை காணோம் ....... என்று அன்பான உறவை கூட்ட நெரிசலில் தொலைத்துவிட்டு அருகிலுள்ள ஊருக்கு வந்து டிவியில் ஏதாவது தகவல் வருகிறதா என்று
பார்த்தால் "இறந்தவர்களில் யாரும் கேரளக்காரர்கள் இல்லை யாரும் பீதியடைய வேண்டாம் கவலைப்படத்தேவையில்லை"என்று நம் இதயத்தை இன வெறி எனும் பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பியால் கீறியது கேரள சேனல்கள் . சிங்களவர்களுக்கு கூட தமிழர்களுக்கு இவ்வளவு கோபம் இருந்திருக்காது.

 அங்குள்ள அரசியல் தலைவர்கள் , கோவில் நிர்வாகிகள் குறைந்தபட்சம் இரங்கல் தெரிவிக்காவிட்டாலும் இந்த பிணங்களையாவது கௌரவமாக  துரிதமாக தமிழர்களிடம் ஒப்படைத்து இருக்கலாம் . ஆம்புலென்ஸ் ஸ்ட்ரெட்சேர் கூட இல்லாமல் ஏதோ இன படு கொலைக்கு பின்னர் எரிப்பதற்கும் , புதைப்பதற்க்கும் குப்பைகளை லாரியில் அள்ளிப்போட்டுச் செல்வதைப்போல் உயிரிழந்த தமிழர்களை குப்புற அள்ளிப்போட்டுக்கொண்டு சென்ற காட்சியை பார்த்தால் தான் தெரியும் இந்திய ஒருமைப்பாடு என்ன நிலவரத்தில் இருக்கிறது என்று ஆத்திரத்துடன் தன் அனுபவத்தை சொன்னார் குருசாமி முனீஸ்வரன் 

அவ்வளவு ஏன் இருபது நாட்களுக்கு முன் சபரிமலைக்கு நான் சென்றிருந்த போது பெரிய கூட்டம் ஒன்றுமில்லை ஆனால் இல்லாத கூட்டத்தை இருப்பதாக காட்டிக்கொள்ள பக்தர்களை எல்லாம் ஏதோ ஆடு மாடுகளை போல் பத்துக்கு பத்து கம்பி வலைக்குள் மிருக காட்சி சாலையை விட கேவலமாக உணவோ தண்ணீரோ சுவாசிக்க காற்றுகூட வாராதது போல் அடைத்து வைத்தனர் . அந்த கூட்டத்தில் எனக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வெளியே வரக்கூட முடியாமல் தவித்த போது ஒரு தன்னார்வ தொண்டு  இளைஞர்கள் என்னை ஸ்ட்ரெட்சேரில் படுக்க வைத்து கோவில் வாசல் வரை கொண்டுவந்து விட்டனர் என தன் அனுபவத்தினை இயக்குனர் டி.பி கஜேந்திரன் கூறினார் .

வழக்கமாக சபரிமலையில் சிறு சிறு வியாபாரம் ஓட்டல் நடதுபர்கள் எல்லாம் பாதிக்குமேல் தமிழனாக இருப்பார்கள் . ஆனால் இந்த வருடம் தமிழர்கள் எந்த கடையும் வைக்க அனுமதிக்கப்படவில்லை . அதனாலேயே கூட்ட நெரிசலில் கடைக்காரர்களிடமிருந்து விரட்டியடிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது . தமிழ்நாட்டை சேர்ந்த ட்ராவல்ஸ் களுக்கு அனுமதி இல்லை ..'தமிழ்நாட்டு பக்தர்களை பதினெட்டம்படியிலும் ,கோயிலிலும் ஒரு வினாடி நேரம் நின்று செல்லக்கூட அனுமதிக்கக்கூடாது என்று காவலர்களுக்கு கட்டளையே இடப்பட்டுள்ளது என்கிறார் தன் யாத்திரையை பாதியில் முடித்து விட்டு சாமி பார்க்காமல் வந்த சந்திரசேகர்.

இவர்கள் அனைவரும் சொல்வதைப்பார்த்தால் நடந்தது எதேற்சையான விசயயமல்ல .நீண்ட கால (அ)லட்சியம் மற்றும் பிற மாநில பக்தர்கள் திட்டமிட்டு அவதிக்கு உள்ளாக்க நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது .
நடந்த சம்பவத்தை பற்றி ஐயப்பனின் வம்சத்தினை சார்ந்த பந்தள ராஜாவுமான விசாகம் நாள் ராமவர்ம ராஜாவிடம் கேட்ட போது வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டுதான் தேவாம்ச போர்டு செயல்படுகிறது . இதில் தமிநாட்டு மக்கள் , ஆந்திர மக்கள் , கேரள மக்கள் , கர்னாடக மக்கள் என்று தனித்தனியாக பார்ப்பது தவறு . எல்லோரும் ஐயப்பனை மனதில் வைத்து கடுமையான விரதமிருந்துதான் வருகிறார்கள் . வரும் பக்தர்களுக்கு வேண்டியதை செய்ய முன்வராத தேவசம் போர்டு எதற்கு அதை கலைத்துவிட்டு ஒரு கமிட்டியிடம் ஒப்படைப்பதே சிறப்பு என்று பொருமிகிறார் .... இனி விழித்து கொள்ள வேண்டியது பக்தர்கள்தான் ...


நன்றி - வீரகேரளம் சரவணன் ,குமுதம் 

இப்பதிவை குமுதத்தில் படித்தவுடன் நான் அதிர்ந்துவிட்டேன். நான் கேரளாவில் சுற்றுலா என்று பல இடங்களுக்கு சென்றுள்ளேன் . அங்கெல்லாம் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாகத்தான் இருக்கும் . மரியாதைக்கும் குறைவிருக்காது . ஆனால் பக்தி பக்தர்களின் கண்ணை மறைத்து பக்தர்கள் சபரிமலையில் குவிவதால்தான் பணம் தேவாம்ச போர்டின் கண்களை மறைத்து விட்டது போலும்.

சாமி கும்பிடாமல் என்னை போல் பலர் மகிழ்ச்சியாக இருக்கையில் நீங்கள் ஏன் ....?????
அப்படி கும்பிட்டுதான் ஆக வேண்டுமென்றால் ............ஐயோ ஆண்மீகவாதிகளே ,பக்தர்களே,சாமிகளே ஒரு நிமிடம் தங்கள் குடும்பத்தை நினைத்து கூட்டத்தில் கோவிந்தா போடுவதை விட்டு விட்டு உங்களுக்கு பிடித்த கடவுளை வீட்டிலிருந்தே தரிசித்து தங்கள் குடும்பத்திற்கும் ,குழந்தைகளுக்கும் நிம்மதியை கொடுத்து மகிழ்ச்சியாக வாழுங்கள் .

Thursday, January 27, 2011

வெங்காய விலையும் , வெட்டி விவசாயமும்


உலகில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக தேவைகளும் பெருகிவிட்டன. இதற்காக எந்த வரைமுறையும் இல்லாமல் இயற்கை ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இப்படியேத் தொடர்ந்தால் வரும் நமது சந்ததிகளுக்கு நாம் எதை விட்டுவிட்டுப் போகப் போகிறோம் என்னும் கேள்வி எழுகிறது. நமது சந்ததியினர், “ஏன் சுவாசிக்கும் காற்று நஞ்சாக இருக்கிறது, ஏன் குடிக்கத் தண்ணீர் இல்லை, ஏன் மழை இல்லை” என்று நிச்சயம் கேட்பார்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இப்போதே நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் உட்பட அனைத்தும் மாசுபட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு இதுவரை ஏழாயிரம் கோடி ருபாய் கடன் தள்ளுபடி செய்தும் ,விவசாயிகளுக்கு பல மானியங்களும் வழங்கி , வட்டியில்லா கடன் வழங்கி பல நன்மைகளை செய்துள்ளது . அதோடு மட்டுமல்லாமல் விவசாயக் கொள்கை விவசாய உற்பத்தியின் இலக்குகள் மற்றும் முறைகளிலேயே கவனம் செலுத்துகிறது. இத்துடன் விவசாயிகளின் வாழ்க்கை தரம் பொருளாதாரம் ஆகியவையும் கவனத்தில் கொள்ளப்படுகிறது. கொள்கை மட்டத்தில், விவசாயத்தின் பொதுவான இலக்குகளுள் பின்வருவன அடங்கும்:

* பாதுகாத்தல்

* பொருளாதார நிலைப்புத்தன்மை

* சுற்றுச்சூழல் தாக்கம்

* உணவுத் தரம்: உணவுவளிப்பு சீராகவும் தரம் தெரிந்ததாகவும் இருப்பதை உறுதிசெய்வது.

* உணவு தன்னிறைவு: சனத்தொகை தொடர்பிலான தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்தல்.

* உணவு பாதுகாப்பு: உணவு அளிப்பு மாசுபாடு இன்றி இருப்பதை உறுதிப்படுத்துவது.

* உணவு பாதுகாத்தல்: உணவு அளிப்பு மக்கள்தொகை தேவைக்கு ஏற்ப இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவது.

* நிலச்சீரமைப்பு மற்றும் மேம்பாடு

* சுற்றுச்சூழல் தாக்கம்

* பொருளாதார உறுதிப்பாடு.

* வறுமை குறைப்பு

 வேளாண் துறை சார்பாக பல பயிற்சிகள் நடத்துகிறது . எங்கள் ஒன்றியத்தில் இப்பயிற்சிக்கு சுமார் ஆயிரம் விவசாயிகளுக்கு அழைப்பிதழ் கொடுத்தும் வெறும் ஐம்பது பேர் மட்டுமே கலந்து கொண்டது வருந்தத்தக்க ஒன்று .. நேரத்தை வீணாக்கி போராட்டம் , மறியல் , மாநாடு போன்ற செயல்களில் ஈடுபடும் இவர்கள் ஏன் இது போன்ற பயிற்சிகளை புறக்கணித்தும் அரசாங்கத்தினை குறை கூறிக்கொண்டும் உள்ளனர் ...??
விவசாயி விவசாயம் மட்டுமே செய்து கொண்டிருந்தால் அவன் வாழ்வில் முன்னேற்றம் என்பது வெறும் பகல் கனவாகவே இருக்கும் ..இது போன்ற பயிற்சிகளில் கலந்துகொண்டு இயற்கை விவசாயம்,புதிய தொழில்நுட்பம் மற்றும் வணிக ரீதியாக லாபம் அடைவது பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் ..
கடந்த பல ஆண்டுகளாக சாகுபடி பரப்பளவு வெகுவாக குறைந்து வருகிறது. குறிப்பாக அதிகளவு வேளாண்மை முதலீடுகள், குறைந்து வரும் லாபம், வானிலை மற்றும் சந்தை நிலவரங்கள் காரணமாக ஏற்படும் வேளாண் இழப்பீடுகளினாலும், பாகப்பிரிவினை காரணமாகவும் விவசாய நிலப்பரப்புகள் வெகுவாக குறைந்து வருகின்றன.

இவ்வாறு சாகுபடி பரப்பளவு குறைந்து வரும் சூழலில் விவசாயத்தில் புதிய வேளாண் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய முடியாத காராணத்தால் குறைந்த அளவு மகசூல் வரும் சூழல் நடைமுறையில் உள்ளது. இத்தகைய நடைமுறைச் சூழலில் சிறு மற்றும் குறு விவசாயிகள் பொருளாதார நலன்களை பாதுகாக்கவும், விவசாயிகளிடம் புதிய வேளாண் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து அதிகளவு உற்பத்தி, உற்பத்தித்திறன் பெறும் வகையில் புதிய விவசாய செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்.

வரப்பு இல்லா விவசாயம்: விவசாய நிலப்பரப்புகள் வெகுவாக குறைந்து வரும் நிலையில் விவசாயிகள் பொருளாதார முன்னேற்றம், புதிய விவசாய தொழில்நுட்ப அறிமுகம், அதிகளவு சந்தை வாய்ப்புகளை அடிப்படையாக கொண்டுதான் வரப்பு இல்லா விவசாயம் என்ற புதிய விவசாய முறை இந்தியாவின் சில வேளாண் பகுதிகளில் நடைமுறையில் உள்ளது.

இந்த புதிய விவசாய செயல்திட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், விவசாய சுயஉதவிக் குழுக்கள், கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் சமூக அமைப்புகள் வாயிலாக சிறு மற்றும் குறு விவசாயிகள் ஒன்றாக சேர்ந்து ஒற்றுமையுடன் கூடிப் பேசி, தங்களின் சிறிய நிலங்களை வரப்புகளை அகற்றி ஒன்றுபடுத்த வேண்டும். இவ்வாறு கிராம அளவில் ஒன்றாக 10 முதல் 15 விவசாயிகள் ஒன்றாக சேரும் போது ஒரளவு அதிக பரப்பளவு நிலத்தை ஒன்றாக சாகுபடியின் கீழ் கொண்டு வர முடியும்.

பின்னர் மண் மற்றும் நீர் பரிசோதனை வாயிலாக அறிவியல் பூர்வமாக நிலத்தின் தன்மைக்கேற்ப சாகுபடி பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக நிலத்தின் தன்மைக் கேற்ப ஒரு பகுதியில் காய்கள், தோட்டக்கலை பயிர்கள், சிறு தானியங்கள், கால்நடைகளுக்கு தேவையான தீவனப் பயிர்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற தேவைக்கேற்ப தேவைப்படும் வேளாண் விளை பொருள்களை நிலப்பரப்பிற்கு ஏற்ப திட்டமிட்டு சாகுபடி செய்யலாம். வரப்பு இல்லா விவசாயத்துக்கு நிலங்களை வழங்கிய விவசாயிகள் தங்களின் குடும்ப தேவைக்கேற்ப வேளாண் விளை பொருள்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்புதிய செயல் திட்டத்தில் உருவாக்கப்படும் பொதுவான விவசாய கட்டமைப்புகளை பொதுவான விவசாய நிலப்பரப்புகளில் குறிப்பாக வாய்க்கால் பகுதிகளில், புறம்போக்கு இடங்களில் அமைத்துக் கொள்வதன் வாயிலாக பல நிகழ் மற்றும் எதிர்கால தேவை மற்றும் பொது பயன்பாடு பிரச்னைகள் ஏற்பட்டால் தீர்வுகள் பெறலாம். இவ்வாறு வரப்பு இல்லாத விவசாயத்தின் கீழ் செயல்படும் விவசாயிகள் ஒரு விவசாய சங்கமாக தங்களை பதிவு செய்து மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்கள், நலத்திட்டங்களில் பங்கு பெறும் வாய்ப்பும் உள்ளது.

மேலும் நிதி நிறுவனங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்களில் விவசாயிகள் கூட்டாக இணைந்து நிதி சேவைகளை பெறலாம். இச்செயல் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நிலங்கள் தனியாகவே பதிவு செய்யப்பட்டு பட்டா உள்ள நிலையில் தனி நபராகவும், விவசாய நலத்திட்டங்களில் பங்கு பெற முடியும்.

பிற பயன்கள்: சிறு மற்றும் குறு விவசாயிகள் திட்டமிட்டு விவசாயப் பணிகளை இணைந்து ஒற்றுமையுடன் செயல்படுத்தும் போதும் அதிகளவு வேளாண் முதலீடுகளை செய்ய முடியும். உதாரணமாக சிறு விவசாயி தனிப்படை முறையில் ஆழ்கிணறுகள் தனியாக அமைப்பதை விட கூட்டாக அமைக்கும் போது செலவுகள் குறையும், பல புதிய விவசாய தொழில்நுட்பங்களாக சொட்டு நீர் பாசனம் ​(Drip​ irrig​ation), தெளிப்பு நீர் பாசனம் ​(sprinkler​ Irrig​ation)​ ஆகியவற்றில் அதிகளவு வேளாண் முதலீடுகள் செய்து தங்கள் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை வெகுவாக பெருக்க முடியும்.

விவசாயிகள் தங்கள் நிலத்தின் அளவுக்கு ஏற்பவும், தங்களின் மனித உழைப்புக்கு ஏற்பவும் வரும் வருமானத்தை பகிர்ந்து கொள்ளலாம். வெளி ஊர்களில் உள்ள விவசாயிகளின் நிலங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் பல விவசாய நிலங்கள் உற்பத்தி இல்லாமல் தரிசாக கிடப்பது தவிர்க்கப்படும். அவர்களுக்கு விவசாயிகள் நிர்ணயம் செய்த குத்தகைப் பணத்தை பருவம் தோறும் வழங்கலாம். பெரிய வேளாண் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு முன்பே விலை நிர்ணயம் செய்த விலையின் அடிப்படையில் வேளாண் விளை பொருள்களை உற்பத்தி செய்து விற்று அதிகளவு லாபம் பெறலாம.

எனவே தமிழகத்தின் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாவதைத் தடுக்கவும், விவசாயிகளின் பொருளாதார நலன்களை பாதுகாக்கவும் இதுபோன்ற புதிய வேளாண் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து அதிகளவு உற்பத்திகள் வாயிலாக அதிகளவு லாபம் பெறலாம்.

வரப்பு இல்லா விவசாயத்தை கிராமங்களில் அறிமுகம் செய்து, விவசாயிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிகளவு லாபம் பெற முடியும்

குறிப்பு :-
"இலவச வேளாண் வணிகப் பயிற்சி"
மத்திய அரசின் வேளாண்மை அமைச்சகம் சார்பில் வேளாண் மருத்துவ மையம் மற்றும் வேளாண் விற்பனைத் தொழில் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு இலவச தங்குமிடம், சாப்பாடு, பயிற்சி ஏடுகள், நிர்வாகம் மற்றும் திட்டமிடும் பயிற்சிகள் ஆகியவை வழங்கப்படும்.விவசாயிகள் அனைவரும் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள வேளாண் மருத்துவ மையம் மற்றும் வேளாண் விற்பனைத் தொழில் பயிற்சி மையத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

இலவச ஆலோசனை

விவசாயிகள் தங்களின் கேள்விகளுக்கு இலவசமாக பதில் பெற ""கிஸான் கால் சென்டர்'' மையத்தை கட்டணமில்லாத எண்ணை 1800 - 180 - 1551 தொடர்பு கொள்ளவும்.

இலவச வானிலை தகவல்

தமிழகத்தின் எந்தப் பகுதியில் உள்ள வானிலை நிலவரங்களையும் அறிய ' 1800 180 1717 ' அழைக்கவும்

Tuesday, January 25, 2011

ப்ளாக் எழுதுனா நீ கொம்பனா ?


இன்று தேசிய வாக்காளர் தினம் :-  ஒவ்வொருவரும் இயன்றவரை வாக்களிக்கும் உரிமை பற்றியும் , அதன் அவசியம் பற்றியும் பிறருக்கு எடுத்துக்கூறி நம் நாட்டை உயர்த்துவதே லட்சியமாக கொள்ளவேண்டும். அதே சமயம் நாளை நம்நாடு 62வது குடியரசுதினத்தை கொண்டாட தயாராகிவரும் வேளையில் ஒரு மிக முக்கியமான பதிவினை பகிர்ந்துகொள்ள கடமைப்பட்டுள்ளேன் . சுதந்திரம் பெற்று குடியரசான ஒரு நாட்டின் மிகப்பெரிய பலம் , கருத்து சுதந்திரமாகும் . இச்சுதந்திரம் நம்நாட்டில் மிகவும் சுதந்திரமாக உள்ள வேளையில் அதனை சிலர் தவறாக பயன்படுத்தி மக்களையும் நாட்டினையும் அவமதித்து இழிவு செய்துவருகின்றனர் .

விரிவாக சொன்னால் , இந்த கருத்து சுதந்திரம் என்பது கணினியின் வாயிலாக அணைத்து மக்களும் தங்களுடைய சமூக வலைத்தளம் , வலை பதிவுகளில் தங்களுடைய எண்ணம் மற்றும் கருத்துக்களை பகிர்ந்தும் கேட்டும் கொள்கின்றனர் . என்னை பொருத்தவரை இந்த சமூக வலைத்தளம் மற்றும் வலைப்பதிவுகளை மூன்று வகையான மக்கள் பயன்படுத்துகின்றனர் ..

1.தேவை 

2.பொழுதுபோக்கு 

3.தொழில் 

தேவை 

இந்த வகையினர் Facebook , Twitter, Orkut, போன்ற ஏதோ ஒன்றில் கணக்கு வைத்துக்கொண்டும் , மெயில் பார்ப்பது மட்டுமே இவர்களின் வேலை மேலும் இவர்கள் ப்ளாக் வைக்கவோ நோட் எழுதவோ விரும்புவதில்லை , அப்படியே பார்த்தாலும் மேலோட்டமாய் மேய்ந்துவிட்டு தம் பணிக்கு திரும்பிவிடுகிறனர் .சில தகவல் தேடுவது மட்டுமே இவர்களின் இணையப் பயன்பாடு .அதிகபட்சமாக ஒரு மணி நேரம் மட்டுமே இணையத்தில் செலவிடுவர் .

பொழுதுபோக்கு 

இவர்கள் முதல் வகையினரை போலவே  Facebook , Twitter, Orkut, போன்ற ஏதோ ஒன்றில் கணக்கு வைத்துக்கொண்டும், தமது நட்பு வட்டத்தில் மட்டும் பகிர்ந்து கொண்டும், பெயரளவில் ஒரு ப்ளாக் வைத்துக்கொண்டு தன்னுள் தோன்றும் கதை கவிதைகளை பதிந்துவிட்டு தங்கள் வேலையை தொடர்வர் , இவர்களில் பலர் வலை உலகில் நடக்கும் விவாதங்களில் வாதிடாமல் , படிப்பது மட்டுமே வேலையாகும் ,  இவர்களின் இணையப் பயன்பாடு .அதிகபட்சமாக ஒரு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் மட்டுமே இணையத்தில் செலவிடுவர் .

தொழில் 

மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டியவர்கள் இந்த வகையினர் . ஏனெனில் மேற்கூறிய இரண்டு வகையினரையும் குழப்பும் அல்லது மாற்றும் திறன் கொண்ட இவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டிலோ , கணிணி சம்மந்தப்பட்ட துறையிலோ உள்ளவர்கள் என்பது குறிபிடத்தக்கது. இவர்களின் வேலையே தான் பின்பற்றும் அமைப்பையோ அல்லது தனது கொள்கையையோ தனக்கு பிடித்த தலைவர்களையோ முன்வைத்து மட்டுமே எழுதியும் அவர்களுக்காக வாதாடியும் சில தவறான தகவல்களை பரப்பியும் வருபவர்கள் . அதிலும் குறிப்பாக எதார்த்த நிலைமையிலிருந்து வேறுபட்ட சிந்தனையை துண்டுவதே  இவர்களின் நோக்கமாகும் . கருத்துகளில் சண்டையிடுவதும் விதண்டாவாதம் செய்வதுமே இவர்களின் தலையாய பணியாகும் .
இவ்வகையில்  Facebook , Twitter, Orkut, ப்ளாக் இல் கணக்கு வைத்துக்கொண்டு தான் ஒரு பெரிய கொம்பன் என்ற நினைப்பில் தங்கள் வலைத்தளம் முன்னணியில் வரவேண்டும் என்று நினைப்புடன் தவறாகவும்  தாருமாராகவும் எழுதும் தன்மை கொண்டவர்கள்.

தமிழையும், தமிழ்நாட்டையும் தாண்டி குடும்ப சுமைகளை சுமக்கும் தமிழர்கள், தாயகம் விட்டு வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் என, தமிழர்கள் கிளை பரப்பி இருக்கும் அனைத்து தேசங்களிலும் வாழும் தமிழர்கள் தங்களுக்குள் இன்னும் மாறாத, மற்ற முடியாத தமிழார்வ மிகுதியாலும், தமிழ் புலமையாலும், கவிதை, கதை, கட்டுரை என எழுதுவதை கடமையாக கருதுகின்றனர். இவர்கள் மட்டுமே தன் தேசம் தாண்டிநாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள்  என்றால் அது மிகையாகாது.

என்னைப்பொருத்தவரை புத்தகம்,உலகம்,சினிமா,அறிவு,வேலை ,தற்சமய  நிகழ்வு போன்றவற்றை உட்கார்ந்த இடத்தில் தம் கண்முன் நிறுத்தும் இணையில்லாதது இணையம் .
இதை வைத்துக்கொண்டு இதையே தொழிலாக கொண்டிருக்கும் சிலர்

* ஈழம்

* சினிமா மற்றும் சினிமா பிரபலங்கள்

* அரசியல் தலைவர்கள்

  இந்த மூன்றை மட்டுமே அதிகமாக விமர்சித்து மற்றவற்றை மறந்தவர்கலாயினர் .

இங்கே எந்தவொரு தனிமனிதனும் விமர்சனத்திற்கு உள்ளானவன்தான். அதற்காக தவறான தகவல்களை பதிவேற்றுவதும் பரப்புவதும் கூடாது.

  ஆனால் சிலர் வெறும் வருவாய்க்கு மட்டுமின்றி வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொள்ளவும், அனுபவிக்கும் ஆசையிலும் வெளிநாடு செல்பவர்கள். டாக்டர், இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சொல்வது போன்று வெளிநாட்டில் வேலை என்பதையும் சிறுவயதிலேயே பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் ஊட்டி வளர்க்கின்றனர். வேலை செய்வதற்கான சூழலும், வாய்ப்புகளும் அதிகம் என்பதாலும், சொந்த ஊரில் அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்காகவும் வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் அதிகம். ஆனால் முக்கிய இலக்கு வருவாய்தான். இரண்டாவது இடத்தில்தான் வாழ்க்கை வசதிகள். 
இப்போதெல்லாம் தொழிற்கல்வி பயிலுபவர்களின் கனவே வெளிநாட்டு வேலை என்பதாகி விட்டது. ஐஐடி படித்தவர்கள் முதல் ஐடிஐ முடித்தவர்கள் மட்டுமின்றி, ஆரம்ப கல்வியை முடிக்காதவர்களும் வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் பட்டியலில் இருக்கின்றனர். இந்தியாவில் பல ஆண்டுகள் உழைத்து சிரமப்படுவதை விட வெளிநாட்டில் சில ஆண்டுகள் கஷ்டப்பட்டு, கைநிறைய சம்பாதித்து, செட்டிலாகி விடலாம் என்பது வெளிநாடு செல்பவர்களின் தாரக மந்திரம்.
அப்படி சென்றவர்களில் பலர் நமது குக்கிராமத்தில் வசிக்கும் ஏழை மக்களின் நிலையையும் குடிசைவாழ் தமிழர்களின் நிலையையும் சற்றும் தெரிந்தும் புரிந்தும் உணர்ந்தும் கொள்ளாமல் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் நாட்டின் வசதி,கலாச்சாரம்,வளர்ச்சி,தொழிநுட்ப மேம்பாடு,ஆகியவற்றை எவ்வித அறிவுமின்றி,  நூற்றி முப்பது கோடி மக்களையும்,பலதரப்பட்ட ஜாதிகளையும், பற்பல மொழிகளையும் தனது சிறிய நிலப்பரப்பினுள் கொண்டுள்ள தீபகற்ப தாய்நாட்டுடன் ஒப்பிட்டு பேசுவதும்,விமர்சிப்பதும்,வளர்சிக்கு வித்திட்ட தலைவர்களை கேலிக்குள்ளக்குவதும் மிகவும் வெட்கத்துடன் வருந்தும் செயலாகும் .உதாரணமாக நம் தமிழ் நாட்டின் திட்டங்களை ஒரு ஏழைப் பயனாளின் பார்வையில் பார்த்தால் மட்டுமே அதன் பயனும் ,நோக்கமும் நமக்கு விளங்கும்.இத் திட்டங்களை குறை கூறியும் எதிர்த்தும் பதியும் எதிர்பதிவர்கள் யாரும் ஏழை கிராமவாசிகளின் நிலையிலோ அவர்களின் கஷ்ட நஷ்டங்கழிலோ எந்தவித தொடர்பும் இல்லாதவர்களே ...!!

எந்த ஒரு கண்டுபிடிப்பும் தொழில்நுட்பமும் ஆக்கத்திற்கு மட்டுமே பயன்பட்டால் நாமும் நமது நாடும் ஏன் இந்த மனித சமுதாயமுமே நல்வழி கண்டு நன்மை பெரும் என்பதில் எள்முனை ஐயமும் இல்லை ..

Monday, January 24, 2011

கருப்பு வேட்டி அவுந்துபோச்சு சாமி வேஷம் கலஞ்சுபோச்சு



பக்திக்கும், ஒழுக்கத்திற்கும் சம்பந்தா சம்பந்தம் கிடையவே கிடையாது. பக்திக்கும், அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று.

கடவுள்பக்தி இருந்தால்தான் பாவம் செய்யப் பயப்படுவார்கள்.அது இல்லாவிட்டால் அவிழ்த்து விட்ட மாதிரி மக்கள் குற்றங்களில் ஈடுபட்டு விடுவார்கள் என்று சமாதானம் கூறுவதுண்டு.

ஆனால் நடைமுறை உலகம் எப்படி இருக்கிறது? அன்றாடம் ஏடுகளில் வெளிவரும் செய்திகள் என்ன?

நடுநிலையோடு சிந்திப்பவர்கள் எந்த முடிவுக்கு வரவேண்டும்?

குளித்தலையில் மூக்கு முட்டக் குடித்துவிட்டு, வேட்டி அவிழ்ந்தது கூடத் தெரியாமல் சுருண்டு விழுந்து கிடந்த அய்யப்ப பக்தரை, தோழர்கள், தண்ணீரை ஊற்றி, போதையைத் தெளிய வைத்து வீட்டுக்கு அனுப்பினர் என்ற செய்தி விடுதலையில் வெளிவந்தது நினைவில் இருக்கலாம்.

நேற்று ஒரு செய்தி பரவலாக ஏடுகளில் வெளி வந்தது. தூத்துக்குடியில் அய்யப்ப பக்தர்கள் 12பேர் அன்னதானம் வழங்கப்போவதாகக் கடைக்குக் கடை சென்று நன்கொடை திரட்டியுள்ளளனர். சாமி விஷயம் என்றால்தான் மூட மக்கள் அள்ளி அள்ளிக் கொடுப்பார்களே!

இவர்கள் நடத்தையில் சந்தேகப்பட்ட பொதுமக்கள் காவல்துறையில் பிடித்துக் கொடுத்துள்ளனர். இவர் கள் புதுக்கோட்டை மாவட்டம் குலைவாழைப்பட்டியைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது.

இதே ஊரைச் சேர்ந்த 19 பேர் அய்யப்பன் விரத உடையில் இருவர் இருவராகப் பிரிந்து ஊரில் வசூல் செய்து, அந்தப் பணத்தைக் கொண்டு தங்கும் விடுதி யில் அறை எடுத்துக் கொண்டு சூதாட்டம் நடத்தி யுள்ளனர். காவல் துறையினரின் சோதனையின்போது வசமாகச் சிக்கிக் கொண்டனர். இதற்கு முன்பும் இதே பக்தி போர்வையில் இவர்கள் இறங்கி மக்களிடம் வசூலித்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

பக்தி விளைவிக்கும் யோக்கியதை ஒழுக்கம் எந்தத் தரத்தில் உள்ளது என்பதற்கு இதைவிட ஓர் எடுத்துக் காட்டும் தேவையாக இருக்காது. பக்தி வந்தால் ஒழுக்கம் வளரும் தவறு செய்யப் பயப்படுவார்கள் என்று சொல்லுவதெல்லாம் அப்பட்டமான மாய்மாலம் என்பதையும் பொதுமக்கள் உணரவேண்டும்.

எல்லா மதங்களிலுமே பாவ மன்னிப்பு, பிராயச் சித்தம், தொழுகை என்று வைத்துக் கொண்டு தானிருக்கின்றன. செய்த பாவங்களுக்கு எளிதாகப் பரிகாரம் வைத்திருந்தால், கொள்ளை லாபம், குறைந்த முதலீடு என்ற கண்ணோட்டத்தில்தானே மக்களின் சிந்தனையும் செயல்பாடும் அமையும்.

12 வருடங்கள் செய்த பாவம் மகாமகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் ஒரு முழுக்குப் போட்டால், அத்தருணமே போகும், புண்ணியம் கிடைக் கும் என்றால் தவறு செய்ய யார்தான் தயங்குவார்கள்?

12 வருடங்களில் எத்தனை எத்தனைக் குற்றங்களை ஒரு மனிதன் செய்திருப்பான்? அவனுக்குத் தண்டனை ஏதுமின்றி, ஒரு முழுக்கு மூலம் தப்பிவிடுவான் என்று கூறுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்! அதனால்தான் உலகத் தலைவர் தந்தை பெரியார் கூறினார் - பக்தி தனிச் சொத்து, ஒழுக்கம் பொதுச் சொத்து என்றார். கடவுளை மற- மனிதனை நினை என்றார்,

சபரிமலை அய்யப்பன் கோயில் - மகர ஜோதி என்பது அசல் பித்தலாட்டம் - பக்தியின் பெயரால் மக்களை மோசடி செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சி - கபட நாடகம் என்பது அம்பலமாயிற்று.

1973 ஆம் ஆண்டிலேயே கேரள மாநிலப் பகுத்தறி வாளர்கள் 24 பேர் நேரில் சென்று உண்மையைக் கண்டறிந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தனர். கேரள மாநில அரசு அவர்களைக் கைது செய்தது. பகுத்தறிவாளர்கள் எந்தக் குற்றத்தையும் செய்துவிடவில்லை என்று கூறி நீதிமன்றம் அவர்களை விடுவித்தது.

பக்தர்கள் ஒரே ஒரு நொடி இவற்றையெல்லாம் கண்முன் நிறுத்திக் கருத்தோடு சிந்தித்தால், மதமும் அது காட்டும் வழியும் மக்களுக்கு ஆபத்தானது என்பதை விளங்கிக் கொள்ளலாம் அல்லவா!

நன்றி - விடுதலை 

Saturday, January 22, 2011

அசிங்கமான விஷயம் ஒண்ணு சொல்லணும்

கொஞ்சம் அசிங்கமான விஷயம் ஒண்ணு சொல்லணும். யாரும் கோவிச்சுக்கக்கூடாது. இதப்போய் சொல்லவந்துட்டான் என்று திட்டக்கூடாது. உங்ககிட்ட சொல்லாம யாருட்ட போய் முட்டிக்கிறது?
வேற ஒண்ணும் இல்லீங்க…நம்ம ஊர்ல பைக்குல ஹெல்மட் இல்லாம போறதுண்டா? அப்படி போனீங்கன்னா உயிருக்குப் பயம் அது இதுன்னு உங்களைப் பயமுறுத்த இதை எழுதலை. இன்னோரு பயங்கரத்தைப் பற்றிச் சொல்லணும்.

உங்களுக்கு முன்னால் போறவர் தீடீர்னு திரும்பி எச்சில் துப்புவார் பாருங்க..அப்போ தெரியும் ஹெல்மட் மகிமை. அதே மாதிரி, நின்று கொண்டிருக்கும் பேருந்தைத் தாண்டிப் போக வேண்டிய நிலையில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் போக வேண்டியதுள்ளது - எந்த நேரத்தில் எந்தப் புண்ணியவான்(வதி) உள்ளேயிருந்து அபிஷேக விழா நடத்துவார்களோ, யார் கண்டது!

இதில எனக்குப் புரியாத விஷயம் என்ன தெரியுமா? படிப்பு, வயசு, பதவி, தகுதி இந்த மாதிரி எந்த வித்தியாசமும் இல்லாம, எப்படி நம்ம மக்களால் இப்படி நடந்து கொள்ள முடிகிறது? என்ன காற்று அடிச்சாலும் பின்னாலும் மனுஷங்க வருவாங்களே, இப்படி பண்ணலாமான்னு எப்படி யோசனை இல்லாம போகும்? Are we all, as a whole, so self-centered? இதெல்லாம் அடுத்தவங்க சொல்லித்தர வேண்டிய விஷயமா? நம்மளைத்தவிர நாம் எதையும், யாரையும், எப்போதும் கண்டுகொள்வதேயில்லை. சின்ன விஷயந்தான்…ஆனா இது நம்ம national character- ஆக எனக்குத் தெரிகிறது.

Friday, January 21, 2011

தமிழ் யூனிகோட் ஒதுக்கீட்டில் ஆரிய சதி



கணினித்துறை, இணையம் இவற்றில் இந்திய மொழிகளிலேயே அதிக அளவில் வளர்ச்சி கண்டு வருவது தமிழ்தான். அதிலும் ஒருங்குறி எனப்படும் யூனிகோட் முறையில் தமிழ் எழுத்துகள் வந்தபிறகு எண்ணற்ற இணையதளங்கள் பழந்தமிழ் இலக்கியங்களை யும், புதிய படைப்புகளையும் கொண்டும் அறிவியல் கருத்துகளை எளிய தமிழில் தந்து வருகின்றன. இதை எவ்விதத் தடங்கலுமின்றி, உலகின் எந்த மூலையிலிருந்தும் எழுத்துரு (குடிவே) தடையின்றி படிக்கலாம்; எழுதலாம். கூகிள், விண்டோஸ் உள்ளிட்ட அனைத்து நிறுவனங் களும் யூனிகோட் தமிழை அங்கீகரித்து தங்களது மென்பொருள்களிலும் இவற்றை பயன்படுத்திவருகின்றனர். ஏற்கெனவே தமிழுக்கென உலக அளவி லான யூனிகோட் ஒதுக்கீட்டில் 128 இடங்கள் மட்டுமே கிடைத்திருந்தன. இதை அதிகப் படுத்தி தமிழ் எழுத்துகள் அனைத்துக்கும் இடம் கிடைத்தால் தான் எளிமையாகவும், வேகமாகவும் பணிகள் நடைபெறும் . இதற்காக யூனிகோட் சேர்த்தியத்திடம் (Unicode Consortium) கணினித் தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கெனவே தமிழ் எழுத்துகளுடன், வழக்கத்தில் இருக்கும் கிரந்த எழுத்துகளான ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ் அறிஞர்களின் வேண்டுகோளுக்கேற்ப தமிழக அரசும் யூனிகோடு முறையை அங்கிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழ் எழுத்துகளுடன் புதிதாக சில கிரந்த எழுத்துகளையும் சேர்க்கும் முயற்சியை தமிழ் அறிஞர்களுக்கும், தமிழக அரசுக்கும் தெரியாமல் பார்ப்பனக் கும்பல் மேற்கொண்டுள்ளது. இவர்கள் சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள 26 கிரந்த எழுத்துகளை இதுவரை நாம் பார்த்திருக்க வாய்ப்பேயில்லை. தமிழுக்கு சற்றும் தொடர்-பில்லாத, தமிழ் எழுத்துகளுக்கும், தமிழ் எழுத்து முறைக்கும், இலக்கணத்திற்கும் எந்தத் தொடர்புமில்லாத சமஸ்கிருத (கிரந்த) எழுத்துகளைத் தமிழில் சேர்க்க வேண்டும் என்று கோரியிருப்பவர் யார் தெரியுமா? ஸ்ரீ ரமண சர்மா என்ற பச்சைப் பார்ப்பனர். அதற்கு அவர் எடுத்துக்காட்டியிருக்கும் ஆதாரம் எது தெரியுமா? காமகோடி கோஷாஸ்தனத்திலிருந்து சில வரிகள் மற்றும் டி.எஸ். நாராயண சாஸ்திரியின் போஜ சரிதம்'. இப்போது புரிந்திருக்குமே இந்தச் சூழ்ச்சி வலையின் சூத்திரதாரிகள் யாரென்று! சந்தேகமேயில்லாமல் சங்கரமடத்தின் கைகள் தான் இதன் பின்னால் ஒளிந்திருக்கின்றன. காமகோடி பீடத்தைச் சேர்ந்த ஆயுர்வேதக் கல்லூரியும், சமஸ்கிருதக் கல்லூரியும் ஸ்ரீரமண சர்மாவின் பின்னணியில் இருந்து கிரந்த எழுத் துகளை தமிழ் என்று இணைக்க முயற்சிக் கின்றன. தமிழ் மொழிக்குடும்பம் வேறு! ஆரிய சமஸ் கிருத மொழிக்குடும்பம் வேறு! இரண்டின் எழுத்துகளும், அதற்கான முறைகளும், ஒலிப்புகளும் வேறானவை. ஆனால் இப்போது எடுக்கப்பட்டிருக்கும் இந்த முயற்சி வெற்றி பெற்றால் இனி வரும் காலத்தில் தமிழுடன் இந்த 26 கிரந்த எழுத்துகளும் இணைந்தே இருக்கும். வளர்ந்துவரும் இணையத் தமிழ் தான் அடுத்துவரும் அத்தனை தலைமுறைக்கும் தமிழின் அடிப்படையாக இருக்கப்போகிறது.


"இது நீண்டகாலச் சதி. இந்த யூனிகோட் சேர்த்தியம் என்பது பன்னாட்டு நிறுவனம். அதன் சட்ட திட்டங்கள் ஓட்டை உடைசல் களைக் கொண்டன. யார் வேண்டுமானாலும் எந்த மொழியிலும் இன்னின்ன மாற்றங்கள் வேண்டும் என்று சொல்லி எழுதிக் கொடுக்கலாம். அதற்கு உள்ளேயும் தொடர்பிலேயும் சற்று வேண்டியவர்கள் இருந்தால் ஒரு மொழிக்கு என்ன கேடுகளை வேண்டுமானா லும் செய்யலாம். இதைப் பயன்படுத்தி ஆரிய நரிகள் சமஸ்கிருத எழுத்துகளை உள்நுழைக்கப் பார்க்கின்றனர். இதற்கு தமிழ்ப்பற்றாளர்களும், மிக முக்கியமாக தமிழக அரசும் கடுமையான கண்டனத்தையும், மறுப்பையும் உடனடியாகப் பதிவு செய்யவேண்டும். அக்டோபர் 25-ஆம் தேதி யூனிகோடு சேர்த்தியம் சர்மாவின் முன்வைப்பைப் பரிசீலனைக்கு எடுக்கிறது, கடந்த இரண்டுநாட்களில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இது குறித்து யூனிகோடு நிறுவனத் திற்கு தொடர்ந்து எழுதி முடிவு எடுப்பதை சில நாட்கள் தள்ளிப் போடும்படி செய்துள்ளனர். அதற்குள்ளாக போர்க்கால வேகத்தோடு இதனைக் கவனத்தில் எடுத்து தமிழக அரசு செயல்பட வேண்டும்" என்கிறார் தமிழ் கணினி வல்லுநரும், இப்பிரச்சினையை உலகறியத் தந்துள்ளவருமான நாக.இளங்கோவன். இது குறித்து உத்தமம் (INFITT) அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், இப்பிரச்சினை குறித்து அறிந்து செயல்பட்டுவருபவருமான நா.கணேசன் அவர்களின் தொடர்பு கொண்ட-போது, "இச்சிக்கலை உத்தமம் சார்பில் எடுத்துவைத்து எங்களது பரிந்துரையையும் அனுப்பியுள்ளோம்" என்றார். தமிழ்க் கணினித்-துறையில் முக்கியமானவரும், கணித்தமிழ் சங்கத்தில் பங்காற்றுபவருமான மா.ஆண்டோ-பீட்டர் அவர்களிடம் கேட்டபோது, "இது கண்டிப்பாக கண்டனத்திற்குரியது." என்று கருத்து தெரிவித்தார். மேலும், சங்கரமடத்தின் இந்தச் சதிக்கு எதிராக தமிழ்க்கணினித் துறை இளைஞர்களும், தமிழார்வலர்களும் கடும் போராட்டங்களில் ஈடுபட எண்ணியிருப்பதாக வும் தகவல்கள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. இப்படி தமிழ் அறிஞர்களின் கடும் எதிர்ப்புக்கிடையில் காஞ்சி காம'கேடி'களும், பார்ப்பனர்களும் தமிழைச் சிதைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருப்பது கவனத்திற்குரியதாகும். இது குறித்து எச்சரிக்கையுடன் இருந்து தமிழைக் காக்க வேண்டியது மிக அவசரமாகும். தமிழை அழிப்பதில் ஆரியம் எவ்வளவு முனைப்பு காட்டுகிறது என்பதை தமிழர்கள் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.

நன்றி -உண்மை 

Thursday, January 20, 2011

எனக்கு(ம்) பிடித்த சில திரைபடங்கள்



தமிழ்நாட்டில் திரை உலகின் பாதிப்பால் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்ததைப்போல் என்னுள் பல மாற்றங்களை கொண்டுவந்த படைப்புகளுள் சில ... இவையாவுமே உங்களையும் பாதித்திருக்கும் என்றும் எண்ணுகிறேன் ..சினிமா மக்களை சீரழித்து விட்டது என்பதைவிட மக்களை சீராக அழைத்த  தாகவே நான் எண்ணுகிறேன் ..

பராசக்தி

பராசக்தி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ரா.கிருஷ்ணன் மற்றும் சா.பஞ்சு ஆகியோர் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரிபாய், எஸ்.எஸ் ராஜேந்திரன், எஸ். வி. சகஸ்ரநாமம், சிறீரஞ்ஜனி, மற்றும் பலரும் நடித்துள்ளனர். பிற்காலத்தில் தமிழ் நாட்டில் மிகவும் புகழ் பெற்ற நடிகராக விளங்கிய சிவாஜி கணேசனைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய படம் இது.
"பராசக்தி"தமிழ் திரையுலக வரலாற்றில் இன்றும் எட்ட முடியாத ஒரு மைல்கல். கலைஞர் கருணாநிதியின் திரைக்கதை, வசனசத்தில் ஒரு காவியமாக எழுந்து நிற்கிறாள் இந்த பராசக்தி. பல இடங்களில் நம்மை எழுந்து நிற்க வைக்கிறாள் இந்த பராசக்தி. இவள் இன்றும் நம்மை நோக்கி பல கேள்விக்கணைகளை தொடுத்து நிற்கிறாள்.
பராசக்தி தமிழ் சினிமாவின் ஒரு புதிய அலை. பராசக்தி படத்தின் வசனங்கள் மட்டுமல்ல, அதன் திரைக்கதைகூட நவீனமானது, எளிமையானது. எளிய மக்களையும் மனதில் கொண்டு எழுதப்பட்டது.

‘பொண்ணு பொறந்த நாகம்மையார், பையன் பொறந்த பன்னீர்செல்வம்னு பெயர் வைக்கனும்’ என்று வசனம் வரும். நாகம்மையார் தந்தை பெரியாரின் துணைவியார். சுயமரியாதை இயக்கத் தோழர்களின் தாய். பன்னீர்செல்வம் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர். தந்தை பெரியாருக்காக எதையும் செய்யக்கூடியவராக இருந்தவர்.

படத்தில் சிவாஜியின் காதலியாக வரும், பண்டரிபாய் பெரியாரின் சுயமரியதை கொள்கையை கடைபிடிக்கும் பெண். ஆணைவிட அதாவது கதாநாயகனைவிட புத்திசாலி. பண்டரிபாயின் சகோதரர், சுயமரியாதை கொள்கைகளை பிரச்சாரம் செய்யும் சொற்பொழிவாளர் கதாபாத்திரம்.

படத்தின் கடைசிக் காட்சியில், பண்டரிபாய்க்கும் சிவாஜிக்கும் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று குடும்பத்தார், பேசிக்கொள்வார்கள். திருமணத்தை வைதீக முறைபடி நடத்த வேண்டும் என்று சொல்லும்போது, ‘அதெல்லாம் எதற்கு? தாலிகூட வேண்டாம். இரண்டு மாலை. ஒரு சொற்பொழிவாளர் போதும்’ என்று பெரியாரின் சுயமரியாதை திருமண முறையை வலியுறுத்திதான் படம் முடியும்.

பிச்சைக்காரர்களை மிகக் கேவலமாக சித்தரித்து நகைச்சுவை செய்கின்றன இன்றையத் தமிழ் சினிமாக்கள். ஆனால் அந்தக் காலத்திலேயே, பிச்சைக்காரர்களை மரியாதைக்குரியவர்களாக காட்டிய ஓரே படம் பராசக்திதான்.

அன்பே சிவம் 

அன்பே சிவம் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் கமலஹாசன், மாதவன்,நாசர்,கிரண்மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2003 இல் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

இது வரை நான் பார்த்த படங்களில் என் மனதிலிருந்து நீங்காத இடம் பிடித்த திரைப்படம்.ஆனால் இத்திரைப்படம் பிடித்தது எங்கள் கிராமத்தில் எங்கள் இருவருக்கு மட்டும்தான்.பலருக்கு பிடிக்கலவில்லை என்று சொல்வதை விட புரியவில்லை என்று சொல்வதுதான் உண்மை. ஆனால் அன்று பிடிக்கவில்லை என்று சொன்ன அனைவர்க்கும் இன்று பிடித்த படம் அதே அன்பே சிவம் தான். என்ன செய்வது நல்ல படங்கள் வெற்றியடைய எத்தனை வருடம் தேவைப் படுகிறது.

ஒரு வரியில் சொன்னால் "கடவுள் என்றால் என்ன?" இதுதான் படத்தின் கதை. அதற்கான விள்க்கம் தான் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பதிய பட்டிருக்கிறது. இப்படி பட்ட சிறந்த படத்தின் கதையில் கடவுள் பற்றிய விளக்கங்கள் கொண்ட காட்சிகளை ஒரு வரலாறாக சொல்லலாம்.

வீடு

பாலு மகேந்திராவின் "வீடு" ஒரு உன்னத தயாரிப்பு என்பதில் எவருக்கும், மாற்றுக் கருத்து இருக்காது.பெற்றோரை இழந்து தன் தங்கையுடனும் தாத்தாவுடனும் வாழும் நாயகி, அவளின் ஒரே சம்பளத்திலும் தாத்தாவின் பென்ஷன் பணத்திலும் தான் இவர்களின் குடும்ப வாழ்வை நகர்த்த வேண்டிய நிர்ப்பந்தம். இந்த நிலையில் வாடகைக்கு வீடு தேடிக் களைத்துப் போய், அவளின் தாத்தாவின் எதிர்ப்பையும் மீறி சொந்த வீட்டைக் கட்டவேண்டும் என்று அவள் தீர்மானிக்கும் போது சந்திக்கும் சோதனைகள் தான் இப்படம்.அந்தவகையில் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று பாலு மகேந்திராவின் "வீடு" வெளிவந்த ஆண்டு 1988). அர்ச்சனா, சொக்கலிங்க பாகவதர், பானுசந்தர், பசி சத்யா ஆகியோர் நடித்தது. நடிகை அர்ச்சனாவிற்குச் சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் கொடுத்தது இப்படம்.

கன்னத்தில் முத்தமிட்டால்

2002 வருடம் வருடம் இயக்குனர் மணிரத்னம் இயக்கி, மாதவன்.சிம்ரன்,பிரகாஷ்ராஜ், நந்திதா தாஸ் கீர்த்தனா பார்த்திபன் நடித்த
கன்னத்தில் முத்தமிட்டால்.என்னை பாதித்த மற்றொரு ஆழமான அழகான திரைப்படம் .இலங்கை அகதியாக விடப்பெற்ற ஒரு பெண் குழந்தையை திருச்செல்வமும் (மாதவன்) இந்திராவும் (சிம்ரன்) தத்தெடுத்துக்கொள்கின்றனர். இக் குழந்தை உரிய வயதை எய்தியதும் பெற்றோர்கள் இவளிடம் தத்தெடுக்கப்பட்ட விபரத்தைக் கூற, இவள் பல விதமான உணர்ச்சித் தத்தளிப்புகளுக்கு ஆளாகிறாள். தன்னை பெற்ற தாயை காண இவள் ஆவல் கொள்வதால், இவள் பெற்றோர் இவளை இலங்கைக்கு அழைத்து செல்கின்றனர். பெருமுயற்சிக்குப் பின் அவள் தாய் விடுதலைப்புலி போராளி என அறிந்து அவளைச் சந்திக்கின்றனர். தன் தாயை இவள் அமைதி நிலவும் தமிழகத்துக்கு அழைக்கின்றாள். தாய் மறுத்து விடுகின்றாள். ஈழத்தை நினைகும்போதேலாம் என் கண் முன் நிற்க்கும் ஓர் காவியம் .

தென் மேற்கு பருவக்காற்று

சீனு ராமசாமி இயக்கியுள்ள இரண்டாவது படம் தென் மேற்கு பருவக்காற்று. சரன்யாவுடன், விஜய் சேதுபதி, வசுந்தரா சியேட்ரா ஜோடியாக நடித்துள்ளனர்.தமிழ் புவியியல் சார்ந்த படம் என்றால் அது தென் மேற்கு பருவக்காற்றுதான். பார்க்கும் எவரையும் சட்டென்று ஈரப்படுத்திவிடும் தமிழ் மண் சார்ந்த கதை. இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட ஒரு பகுதியின் வாழ்வியல் சார்ந்த கதை. தமிழ் சினிமாவில், முதன்முதலாக சொல்லப்பட்ட புவியியல் பற்றிய படம்.  செழிப்பான கிராமத்துக்கும் வானம் பார்த்த வறண்ட பூமிக்கும் இடையே கதை நிகழ்கிறது.மனிதனின் உணவு, பழக்கம், உடை போன்றவை மாறலாம். ஆனால் எப்போதும் மனித குலத்திடம் மாறாமல் இருப்பது தாய் பாச உணர்வு ஒன்றுதான். அதனை இந்த படத்தில் கொட்டி காட்டியுள்ளனர்.
இத்திரைப்படங்கள் பற்றி எழுதிக் கொண்டே போகலாம். அதனால்தான் எதை எழுதுவது எதை விடுவது என்று தெரியாமல் எனக்கு(ம்) பிடித்த சில திரைப்படங்களிலிருந்து நான் பெற்ற பல பாடங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதினால் பேருவகை அடைகிறேன்..இத்திரைப்படங்கள் யாவுமே மக்களுக்கு பொழுதுபோக்காக அமையாமல் தாங்கள் அன்றாடம் சந்திக்கும் வாழ்வுகளின் பொழுதுகளையே பிரதிபலித்ததின் காரணத்தால் காலம் கடந்தும் கவி சொல்லும் காவியங்கள் இவை .... 

Wednesday, January 19, 2011

சீமான் - பத்து நாளில் பல்டி அடித்து சாதனை


திங்கட்கிழமை, ஜனவரி, 10, 2011 மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,
காங்கிரசை வீழ்த்த இரட்டை இலைக்கு ஆதரவு அளியுங்கள் என்றேன். இப்போதும் அப்படித்தான் சொல்வேன். இதை கூட சொல்வதற்கு தைரியும் இல்லை என்றால் நான் எப்படி போராளியாக முடியும். யாருக்கு வேண்டு மானாலும் ஓட்டு போடுங்கள் என்று குடு குடுப்பக்காரன் போல் நான் ஜோசியம் சொல்ல மாட்டேன்.

புதன்கிழமை, ஜனவரி 19, 2011 :-தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாபர் மசூதியின் தீர்ப்பும், தேசிய அவமானமும் என்ற தலைப்பில் திருச்சியில் கருத்தரங்கம் நடைபெற்றது.இந்த கருத்தரங்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். 
அப்போது அவர் பேசியதாவது,

 ஈழத்தில் உள்ள தமிழ் இனத்தை அழித்தவர் கருணாநிதி. எனவே அவர் மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரக்கூடாது என்று தான் நான் சொன்னேன். அதற்காக நான் ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமா? நான் ஆதரிக்கிறேன் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லையே?


சீமான் முரண்பாடுகளின் மூட்டை

பெரியாரின் பேரன், மாமேதை மார்க்சு மற்றும் அண்ணல் அம்பேத்கரின் மாணவன், தம்பி பிரபாகரனின் தம்பி, இதுதான் அண்ணன் சீமான் மேடைதோறும் முழங்கும் முழக்கம்.
பெரியார்பேரனின் அழகு

தனது முதல் படத்தில் முதல் காட்சியிலேயே ஒரு விதவை பெண் ஒருத்தியை காண்பித்ததன் மூலம் ஒரு புரட்சி செய்துவிட்டதாக சொல்லிக்கொள்ளும் சீமான் தன்னை அறிமுகப்படுத்திகொண்ட விதமேவேறு, அதே படத்தில் ஒருபாடலில் '' மன்னாதி மன்னவராம் மறவர்குல மாணிக்கமாம், முக்குலத்து சிங்கமுங்க முத்துரமலிங்கமுங்க'' என்று தான் யார் என்பதை அடையாளப்படுதுகிறார்.

பின்பு பெரியார் திராவிடக்கழக மேடைகளில் முழக்கங்கள் புதிய அடையாளங்கள், நாத்திகவாதி, தமிழ்தேசியாவாதி, பகுத்தறிவாளன் இன்னும் பல....

முற்போக்காளனின் அடையாளத்தோடு மீண்டும் ஒருபடம் 'தம்பி' அதிலும் உ.முத்துராமலின்கத்தின் படத்தைக்காட்டி தான் யார் என்பதை மறுபடியும் அடையாளப்படுத்திக்கொண்டார், சர்சையான பின்பு அது தன்னை அறியாமல் நடந்ததாக விளக்கம் சொல்லி மன்னிப்பும்கேட்டார், பின்பு மீண்டும் உ.முத்துராமலிங்கத்தின் சிலைக்கு மாலை அணிவித்து சர்சைக்குள்ளானார் இம்முறை புதியவிளக்கம் உ.முத்துராமலிங்கம் ஒரு போராளி எனவும்

( ஏன் என்றால் உ.முத்துராமலிங்கம் முன்றாம் உலகமாக யுத்தம் அவரது தலைமையில் நடக்கும் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர் ,) அவருக்கு பாராளுமன்றத்தில் சிலைவைத்தால்பத்தாது உருசியாவிலும் சிலைவக்கணும் என்கிறளவுக்கு பேச்சு........கோளறு எங்கன்னு தெரியல........

இவரோ பகுத்தறிவாளர், கடவுள் மறுப்பாளர், தந்தை பெரியார் இவரை சாதி என்னும் சாக்கடையில் இருந்து பிடுங்கி தெளிந்த இடத்தில் நட்டதாக சொல்லிக்கொள்பவர். உ.முத்துரமலிங்கமோ பயங்கரமான ஆத்திகவாதி, சாதி சண்டைகளுக்கு இன்றுவரை காரணமாக இருப்பவர். இருவருக்கும் கொள்கையிலும் ஒற்றுமையில்லை, அவரை போராளி என்பதற்கு வேறென்ன காரணம்?

பிராமணர்களை தனது பேச்சால் வெளுத்துவாங்கும் சீமான் கமல்ஹாசனை மட்டும் தலைவர் என்றும் மண்ணின் கலைஞன் என்று சொல்லுவதற்க்கு என்ன காரணம்? விருமாண்டி மற்றும் தேவர்மகன் தான் காரணம்... நாம் தமிழர் இணையதளத்தில் இருந்த பெரியார் எங்கே? பெரியாரின் அடையாளமான கருப்பு நிறம் எங்கே?..........சீமானுக்கு பெரியார் கன்னடராக தெரிந்துவிட்டரா ?

தமிழ்தேசியம் பேசும் நீங்கள் தலித்தியம் பேசுவதில்லை என்றால் நீங்க ஏன் சேரியில் கொண்டுபோய் பிரச்சனையை நிறுத்துகிறீர்கள் நாம் தமிழனாய் ஒன்றினைவோம் என்கிறீர்கள். நாங்க மட்டும் சாதியை மறந்து உங்களின் பின்னால வரணும் நீங்க அதிலேயே தொங்கிட்டு இருப்பீங்க, அண்ணல் அம்பேத்கரின் படம் பொறித்த t -shirt அணியச்சொன்னால் நான் வெள்ளைநிற சட்டை அணிவதில்லை என்றுசொல்லிவிட்டு, பின்பு அவன் என்ன தமிழனா? என்று நெருங்கிய வட்டங்களில் மட்டும் பேசுவது ......... சேகுவேரா மட்டும் என்ன தமிழனா? சேகுவேர படம் பொறித்த t -ஷர்ட் அணிவதில்லையா? எங்கிருக்கிறது பிரச்சனை, யாரை ஏமாத்த எங்களையா அல்லது உங்களை சார்ந்தவர்களையா? சேரியில் கொண்டுபோய் நிறுத்துறோம் என்றால் ஓட்டு பொறுக்க சேரிக்கு போகபோரதில்லையா? ஈன சாதி.......... இது எவனுடயவாயில் இருந்து வரும் சொற்கள்.சாதிவெறி பிடித்தவனின் வாயிலிருந்து வரும் சொற்கள் அல்லாமல் வேறு எவை ?. உணர்சிவசப்பட்டு உரக்க பேசினால் பத்தாது ....... பக்குவபடனும்.... தமிழ்தேசியம் பேசி ஆட்சியை கைபற்றும் கனவோ? பெரியாருக்கு அரசியல் தேவையில்லாமல் இருக்க பேரனுக்கு தேவையோ?

மக்களுக்காகப் போராட…அதுவும் தமிழர்களுக்காகப் போராட ‘நாம் தமிழர்’ என்னும் தமிழர்களுக்காகவே போராடும் (!?) கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் கையில் எடுத்துள்ள ஆயுதம், தமிழர் திருநாளுக்கான இலவசப் பொருட்கள் வழங்கும் பையில் தி.மு.க வின் சின்னம் எப்படி இடம்பெறலாம் என்பது..

ஈழத்தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைபட்டுத் துன்பப்படும் நிலையில், வீரமாகப் பேச மட்டும் சீமானுக்கு அரசியல் அரங்கில் தானும் இருக்கிறேன் என்று நிலைநாட்ட இந்த அல்ப விஷயத்தைத் தவிர வேறு ஒன்றும் இல்லையா என வருந்துகிறேன்..

நன்றி -நக்கீரன் மற்றும் ஒன் இந்தியா  
நன்றி - தமிழ்குறள்  


Tuesday, January 18, 2011

சோ(மாறி) ஒரு இரட்டை நாக்கு பொறம்போக்கு


துக்ளக் ஆண்டு விழாவில் திருவாளர் சோ ராமசாமி மீண்டும் தனது அழுத்தமான பார்ப்பனர் அடையாளத்தை காட்டிக் கொண்டுவிட்டார்.

"கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டினால் என்ன பயன்? அந்த மாநாட்டில் கலைஞரை எல்லோரும் புகழ்வார்கள்; மாநாட்டு மலரிலும் புகழ்வார்கள்;

தன்னைப் பிறர் பாராட்டுவதை - புகழ்வதைக் கேட்பதற்காகத்தான் மாநாட்டை கலைஞர் நடத்துகிறார். தமிழ் வளர்ச்சிக்கு அங்கு எதுவும் நடக்கப்போவதில்லை. ஆங்கில மொழி - இப்படி மாநாடு நடத்தியதாலா வளர்ந்தது?"

என்று துக்ளக் ஆசிரியர் சோ - அவருக்கே உரிய வயிற்றெரிச்சலோடு - அவரது பத்திரிகையின் 42 வது ஆண்டு விழாவில் பேசியிருக்கிறார்.

அவர் நடத்திய அந்த ஆண்டு விழாவில் பேசியவர்கள் அனைவரும்

‘சோ’ - தைரியசாலி

விலைக்கு வாங்க முடியாதவர்

என்ற ரீதியில் அவரை வானளாவப் புகழ்ந்து பேசி இருக்கிறார்கள்.

அதையெல்லாம் மகிழ்ச்சியோடு ரசித்துக் கேட்டுக் கொண்டுதானிருந்தாரே தவிர - "அய்யோ வேண்டாம்; போதும் புகழ்ந்தது" என்று தடுத்து விடவில்லை அவர்!

இப்படிப்பட்ட புகழுரைகளை - பாராட்டு களைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே

ஆண்டுதோறும்

விழா எடுத்து

அதிலே

பேசுவோர் தனக்கு வழங்கும் பாராட்டுகளை ரசித்துக் கொண்டிருப்பவர்!

அப்படிப் பாராட்டுமளவிற்கு இந்த மகானுபவர் என்ன சாதனை நிகழ்த்திக் காட்டி விட்டார்?

- திராவிடர் இயக்கத்தை நையாண்டி செய்வது,

- புராண, இதிகாசங்களிலுள்ள

மூடத்தனங்களைப் பரப்புவது

- ஊழல் எதிர்ப்பு என்ற பேரால் -

ஜெயலலிதாவுக்கு தங்க முலாம் பூசுவது

போன்ற சமூக விரோத - மக்கள் விரோத - பகுத்தறிவுக்கும் விஞ்ஞானத்திற்கும் எதிரான கழிசடைக் கருத்துக்களைப் பரப்புவது

என்பதைத் தவிர

வேறு என்ன சாதித்துவிட்டார்?

செம்மொழி மாநாட்டை அவர் கேலி செய்வது ஒன்றும் புதியதில்லை. சாதி வெறியரான அவர் - தனது சுயசாதி யினரின் அபிமானத்துக்குரிய சமஸ்கிருதத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுபவர்.கோயில்களில் குடிகொண்டிருக்கும் சாமி சிலைகளுக்கு சமஸ்கிருதம்தான் தெரியும், தமிழ் புரியாது என்பார். அதேசமயம் - தேவாரம் பாடிய மூவரிலிருந்து 63 நாயன்மார்களின் வரலாற்றை வாரா வாரம் எழுதுவார்! அவர் போற்றி எழுதும் - திருநாவுக்கரசரோ, ஞானசம்பந்தரோ, சுந்தரமூர்த்தி நாயனாரோ இறைவனை எந்த மொழியில் போற்றிப் பாடினார்கள்? தமிழில்தானே? திருஞானசம்பந்தருக்கு பார்வதியே வந்து ஞானப்பால் ஊட்டினாரே; அந்த சிசு, பார்வதி ஊட்டிய பாலைக் குடித்து விட்டுப் பாடிய பாடல் எந்த மொழியில்? தமிழில்தானே? மாணிக்கவாசகர் பாடிய திருவாசகமும் தமிழ்தானே? சேக்கிழார் சுவாமிகள் - பெரியபுராணம் பாடினாரே - அதற்கு - ஈசனே தானே முதலடி யைப் பாடினார் - அதை உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கரியவன் என்றுதானே - தமிழில் தானே அடியெடுத்துக் கொடுத்தான். திருஞானசம்பந்தர் - மதுரை கூன் பாண்டியனின் தீராத வயிற்று வலியையும் (சூலை நோய்) கூன் விழுந்த முதுகையும் போக்கினாரே - அதற்கு அவர் பாடிய "மந்திரமாவதும் நீறு; வானவர்மேலதும் நீறு" என்ற பதிகம் தமிழ்ப் பதிகம்தானே? திருமறைக்காட்டில் (வேதாரண்யத்தில்) நூற்றுக் கணக்கான வருடங்களாக - திறக்க முடியாதபடி - அடைத்துக் கிடந்த ஆலயக் கதவை - தமிழில் பதிகம் பாடித்தானே அப்ப ரடிகள் - ஞானசம்பந் தருடன் இணைந்து திறந்து வைத்தார்!திருவெண்ணைநல்லூரில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருமணத்தன்று இறைவன் அவரைத் தடுத்தாட்கொண்டபோது இறைவனின் விருப்பப்படி பாடிய பாடல் - "பித்தா பிறைசூடி" தமிழ்ப் பாடல்தானே?இதையெல்லாம் எழுதி எழுதி அல்லையன்ஸ் பிரசுரம் மூலம் காசு சம்பாதித்து வயிறு கழுவும் பக்தி வியாபாரி சோ 

தமிழில் அர்ச்சனை செய்தால் அது சாமிக்குப் புரியாது. சாமிக்கு ‘வைபரேஷன்’தான் முக்கியம். அந்த அதிர்வுகள் சமஸ்கிருதத்தில் தான் இருக்கிறது என்று வக்கணை பேசுவார். காரணம் என்ன? அவரது சுயசாதியினருக்கே பொதுவான தமிழ் விரோதம்- சமஸ்கிருத அபிமானம்தான்! உலகத் தமிழ் மாநாட்டினால் ஒன்றும் பயனில்லை என்கிறார்; அதனால் தமிழ் வளராது என்கிறார். ஆனால் - மலேசியா - கோலாலம்பூரில் ஆரம்பித்து, சென்னை, பாரிஸ், யாழ்ப்பாணம், மதுரை, கோலா லம்பூர், மொரீசியஸ், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் 8 முறை மாநாடு நடத்தப்பட்டிருக் கிறதே உலகத் தமிழ் மாநாடு? உலக முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான தமிழறிஞர்கள் கலந்து கொண்டு ஆய்வு அறிக்கைகள் படித்தார்களே- அதனால் எல்லாம் தமிழ் வளரவில்லையா?

‘சோ’வின் சொந்த ஜாதிக்காரராகிய சங்கராச்சாரியார் சமஸ்கிருத வளர்ச்சிக்காக சதஸ்கள் நடத்தினால் அதன் மூலம் சமஸ்கிருதம் வளரும் என்று மட்டும் நம்புகிறாரே எப்படி? தமிழ்நாட்டு அரசியலை - வெறும் அரட்டைக் கச்சேரியாக மாற்றுவதற்காகவே பத்திரி கை நடத்தும் சோ - ஆண்டுதோறும் தன்னைப் புகழ மண்டபக் கூட்டங்கள் நடத்தும் சோ - கலைஞர் - செம்மொழி மாநாடு நடத்துவது தம்மைப் புகழ - பாராட்டத்தான் என்கிறாரே அதை என்னவென்று வர்ணிப்பது?சங்கராச்சாரியார் உரைகளை எல்லாம், கட்டுரைகளை எல்லாம் ‘தெய்வத்தின் குரல்’ என்று புகழும் ‘சோ’க்கள் - இப்படியெல்லாம் பேசுவது எந்தப் புத்தியினால்?பெரியார் தந்த புத்தியை உபயோகித்துப் பார்த்தால் - அது எந்தப் புத்தி என்பது உள்ளங் கை நெல்லிக்கனி போல பளிச்சென்று விளங்கும்!

கேள்வி பதில் -விளக்கம் 

கேள்வி: ரிமாண்ட் கைதிகள் மற்றும் சிறைக் கைதிகளுக்கு கிராமியக் கலைகளில் பயிற்சி அளிக்கலாம் என்று கனிமொழி எம்.பி., யோசனை தெரிவித்துள்ளதுபற்றி?

பதில்: சரி தான் சொன்னபடி நடக்க வேண்டிய, அடிமை நிலையில் இருக்கிறவார்கள்தான் இந்தப் பயிற்சியை ஏற்பார்கள் என்று அவரே தீர்மானித்து விட்டார் போலிருக்கிறது. கல்லுடைக்கச் சொன்னால் உடைக்க வேண்டியவர்கள் இதைச் செய்ய மாட்டார்களா என்ன? கலை, கைதி சங்கமம்!

(துக்ளக் 3.2.2010)

கிராமியக் கலைகள் என்றால் இந்த மண்ணுக்குரியது. தமிழர்களுக்குரியது. அதனை அழித்துவிட்டு அதன் மேல் ஆரியப் பார்ப்பனக் கலாச்சார சங்கதிகள் அட்டாணிக்கால் போட்டு உட்கார்ந்து கொண்டு இருக்கின்றன. ஆத்திரம் வராதா அக்கிரகார சிகாமணிகளுக்கு?

ஆத்திரத்தை ஏதோ ஒரு வகையிலே வெளியேற்றாவிட்டால் அவாளுக்கு ரத்தக் கொதிப்பு வந்து விடுமே. அந்தப் பாணிதான் சோவின் பதிலும்.

சரி, அவர் விவாதப்படியே வருவோம்.

கலையைக் கற்றுக் கொள்ளும்போது குரு சொன்னபடி நடந்தால் அதில் என்ன தவறு இருக்கிறது? அதற்கு பெயர் பார்ப்பன சோக்களின் அகராதியில் அடிமை நிலை என்று பெயரா? ஆசிரியர் சொன்னபடி நடக்காமல் கல்வி பயின்ற அடங்காப் பிடாரிகளா இவர்கள்?

கலை - சதி - சங்கமம் என்று இவாள் சொல்லும் முறை கிராமியக் கலையைக் கொச்சைப்படுத்தும் மேல் ஜாதி ஆணவச் சிந்தனைப் போக்கு என்பதை உணர வேண்டும். சின்ன வயதில் வெண்ணெய்யைத் திருடி வாலிப வயதில் பெண்ணைத் திருடியக் கிருஷ்ணனைப்பற்றி நாட்டியம் ஆடினால் தானே அவாளுக்கு இனிக்கும்!

*******************************************


கேள்வி: ஆண்களுக்குப் போட்டியாக பெண் அதிகாரிகளும் துணிந்து லஞ்சம் வாங்க ஆரம்பித்திருக்கிறார்களே! பெண்களின் துணிச்சலை நினைக்கும் போது வியப்பாக இருக்கிறதே?

பதில்: ஒரு வியப்பும் இல்லை. பேசாமல், ஆண்கள் வாங்குகிற லஞ்சத்தில் 33 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து சட்டம் கொண்டு வரலாம். அது பெண்மைக்கும் பெருமை; நாட்டிற்கும் கவுரவம்; சமநீதி; சம உரிமை... எல்லாம்.

(துக்ளக் 3.2.2010 பக்கம்13)

எப்பொழுதுமே பெண்களை மட்டம் தட்டி எழுதுவதில் குறியாக இருப்பவர்தான் இந்த சோ ராமசாமி. காரணம் அவாளின் மனுதர்மச் சிந்தனை.

படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார் (மனுதர்மம் அத்தியாயம் 9; சுலோகம் 17)

இந்த மனுதர்மத்தை அடேயப்பா, எப்படியெல்லாம் தூக்கிப் பிடித்து எழுதியிருக்கிறார் இந்த சோ.. வெறுக்கத்தக்கதா பிராமணீயம்? என்ற சோவின் தொடரைப் படித்தால் இந்த உண்மை விளங்கும். அவாள் வீட்டுப் பெண்களையும் இப்படி ஆபாசமாகத்தான் நடத்துவார்கள் போலும்!

சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் பெண்ணுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வேண்டும் என்று எழுந்திருக்கும் கோரிக்கையைக் கொச்சைப்படுத்துவதற்காகவே லஞ்சம் வாங்குவதில் 33 சதவிகிதம் ஒதுக்கீடு செய்யலாமே என்று பேனா பிடிக்கிறார்.

பெண்களையும் மட்டம் தட்ட வேண்டும் இடஒதுக்கீட்டையும் கொச்சைப்படுத்த வேண்டும் ஒரே கல்லால் இரண்டு காய்களை வீழ்த்த வேண்டும் என்ற அக்கிரகாரக் கீழ்ப்புத்திதான் சோ வின் இந்தப் பதிலில் வழிகிறது.



கேள்வி: தி.மு.க. அரசு அறிவித்த இலவசத் திட்டங்களில் தங்களுக்குப் பிடித்த திட்டம் எது?

பதில்: இரண்டு ஏக்கர் நிலம் இலவசம் என்கிற திட்டம் சிறப்பு வாய்ந்தது. என்றும் வாக்குறுதியாகவே இருக்கக் கூடியது. ஒரு வாக்குறுதி என்றால் அது நிலைத்து இருக்கவேண்டும். இந்த இலவசம் அப்படிப்பட்டது. வாழும் வள்ளுவர் மாதிரி, வாழும் வாக்குறுதி! அழிவே கிடையாது (துக்ளக், 17.2.2010).

இதுபோன்ற பார்ப்பனத்தனமான _ வறட்டுத்தனமான பதிலை திருவாளர் சோ ராமசாமி அய்யரைத் தவிர வேறு யாரால்தான் எழுத முடியும்?

தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் என்று இன்றைக்குக்கூட முதல்வர் கலைஞர் அவர்கள் முரசொலியில் ஒரு பட்டியலை அளித்துள்ளார்.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி

ஏழைப் பெண்கள் திருமணம் செய்துகொள்ள நிதி உதவித் திட்டம்

கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவித் திட்டம்

பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம்

உழவர் சந்தை திட்டம்

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்

கூட்டுறவுக் கடன்கள் ரத்து

உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்

108 ஆம்புலன்ஸ் வசதித் திட்டம்

கலைஞர் வீட்டு வசதித் திட்டம்

என்று ஒரு பட்டியலை முதல்வர் வெளியிட்டுள்ளார்.

அறிவு நாணயம் அடிமட்ட அளவுக்கு இருந்தால்கூட இவற்றையெல்லாம் ஒரு கணம் சிந்தித்துப் பார்த்திருப்பர்.

பார்ப்பன அம்மையாரை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்து அழகு பார்க்கவேண்டும் என்ற அடங்கா ஆசை பிடரியைப் பிடித்துத் தள்ள இப்படி தத்துபித்து என்று எழுத ஆரம்பித்துள்ளார்.

மேற்கண்ட திட்டங்கள் எல்லாம் பஞ்சம, சூத்திர மக்களுக்குத்தானே! பெரியார் சமத்துவப்புரம் என்றால் இனிக்குமா இந்த இடிஅமீன் கூட்டத்துக்கு?

அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் என்றால், அக்கிரகாரத்துக்கு அதனால் என்ன நன்மை?

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கி ஏழை எளிய மக்களின் தலைவிதியை மாற்றலாமா?

அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளில் தலையிட்டுத், தலையிட்டு, அவர்களைத் தலைதூக்கி விட்டால் அவாளுக்குப் பிடிக்குமா?

மக்களின் ஆதரவு அமோகமாக தி.மு.க. ஆட்சியின் பக்கம் நாளும் வளர்ந்தால் அது ஜெயலலிதா அம்மையாருக்கு ஆபத்தாயிற்றே!

அதனால்தான் அம்மிக் குழவியை எடுத்து வயிற்றில் குத்திக் கொள்கிறார் இந்த வடிகட்டின பார்ப்பனர்!

இரண்டு ஏக்கர் நிலம் இலவசம் என்ற திட்டம் சிறப்பு வாய்ந்தது; நிரந்தர வாக்குறுதியாக இருக்கும் என்று நக்கல் செய்கிறார்.

இந்தத் திட்டம் ஒரு நொடிப்பொழுதில் நிறைவேற்றப்படக் கூடியதல்ல; அதேநேரத்தில் படிப்படியாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது மறுக்க முடியுமா சோவால்?

அவர் கூற்றுப்படியே பார்த்தாலும் இந்தத் திட்டத்தைத் தவிர தி.மு.க. கொடுத்த மற்ற திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை வேறு வழியின்றி திருவாளர் சோ ஒப்புக்கொண்டுள்ளார் என்பது உண்மை!

வறட்டுத்தனமாக எழுதுபவராலேயே தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை மறைக்க முடியவில்லையே!
-நன்றி:- விடுதலை

பார்ப்பனர்களின் எல்லாப் புரட்டுகளையும் தோலுரித்த பெரியார் - இறப்புக்குப் பின் எந்த லோகத்திலும் இருக்க மாட்டார்! இந்த லோகத்திலேயே இருக்கிறார் - பகுத்தறிவு, நாத்திகம், அறிவியல், மனித நேயம் என இன்னோரன்ன பல அறிவுக் கருத்துகளின் வடிவில் இருக்கிறார் - என்றென்றும் இருப்பார்!

தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும் அதில் குற்றம் குறை கண்டுபிடிப்பவர் நம்ம சோ ராமசாமி அவர்கள். தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தினால் அதுறகும் தி.மு.க. மீது பழி மழை பெய்தால் அதற்கும் தி.மு.க. மீது பழி என்று குறை சொல்லுபவர். இவருக்கு பத்திரிக்கை வேறு இருப்பதால் உடனே கார்ட்டூன் வேறு தீட்டிவிடுவார். கலைஞர் என்றால் காய்ச்சி எடுக்கும் அவரது கார்ட்டூன்கள் ஜெயலலிதாவோ மற்ற இந்துத்வ தலைவர்கள் என்றாலோ வெண்சாமரம் வீசும். 

இந்த துக்ளக் சோமாறி ஒரு இரட்டை நாக்கு பொறம்போக்கு ஜந்து .. செம்மொழியாம் நம் தாய்த்தமிழையும் தமிழர் தம் பண்பாட்டையும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மட்டம் தட்டும் குள்ளநரி இந்த மொட்டைப் பாப்பான். தமிழை நீசபாசை என்று இழிசொல் பேசும் காஞ்சிக் கொலைகாரன் ஊத்தைவாய் காமகேடி சங்கராச்சாரியின் ஊதுகுழல் இவன். ஏன்.. இவனுக்கு தில்லு இருந்தால் செத்துப்போன ஆரிய மொழியாம் சமஸ்கிருதத்தில் பத்திரிக்கை நடத்த வேண்டியது தானே இந்த துரோகி !

இவன் போன்ற துரோகிகளின் பருப்பு இங்கே தமிழ்நாட்டில் வேகவே வேகாது.

Thursday, January 13, 2011

அரசியலில் வென்று ஈழம் உருவாக்க முடியுமா?




எங்களுக்கும் உணர்வு உண்டு. உணர்வற்ற ஜடங்களாக எங்கள் அன்னை பெறவில்லை. அப்படி எங்கள் தந்தை வளர்க்கவில்லை. ஈழம் வேண்டும் என்பது என்னவோ உங்களுடைய ஆதங்கம் என்றும், நாங்கள் எல்லாம் வேறு இனத்தவன் என்றும் நினைத்து பேசுகிற தோழர்களே. எங்களுக்கு உங்களைவிட உணர்வுகள் அதிகம். உங்களைபோல காட்டுகூச்சல் போடுவது எங்கள் வேலை இல்லை. நீங்கள் இங்கிருந்து கத்தினால் என்ன பயன். நமக்கு பொது எதிரி என்று ஒருவன் இருக்கும் பொது, இங்கிருக்கும் சகோதரர்களை பகைக்கிற நீங்கள் போராளியா ? இங்கிருந்து கத்தினால் ஒன்றும் நடக்காது என்று தெரியும் எங்களுக்கு. ஏன் என்றல் என் தலைவன் அறிவை தந்திருக்கிறான். தலைவர் அவர்களை திட்டுவதால் உங்களுக்கு ஈழம் கிடைக்குமா ? அப்படி கிடைத்தால் தான் உயிரையும் கொடுப்பார். தலைவரை திட்டுவதன் மூலம் கோடிக்கணக்கான தி. மு. க தமிழ் உள்ளங்களை பகைக்கிரீர்கள். போராளி தான் சொந்த இனத்தின் உடன்பிறப்புகளை பகைப்பானா ? நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள். அரசியலில் வென்று ஈழம் உருவாக்க முடியுமா ? இலங்கையின் அதிபரை எவரும் கட்டாய படுத்த முடியாது.

சீமான் அவர்களே உங்களுக்கும் ஈழம் முக்கியம் என்றால், இந்திய மற்றும்  தமிழக அரசியலை விடுத்து உலகம் தழுவிய அமைப்புக்கு புத்துணர்வு கொடுங்கள். அந்த அமைப்பில் எல்லா கட்சியை சேர்ந்த தமிழர்களும் ஒன்றிணைவார்கள். அரசியல் லாபத்திற்காக ஈழத்தை பயன்படுத்தினால் என்றாவது ஒருநாள் சமுதாயம் காறித்துப்பும் தூக்கி எறியும்.
நன்றி - மெல்வின் 

2008 நவ-14 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் நடந்தவை 

சென்னை நவ-14.(டிஎன்எஸ்) இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக பதவியை துறக்க தயார் என்று முதலமைச்சர் மு கருணாநிதி, ஆவேசமாக நவ-14 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் கூறியுள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சேயின் கருத்தை ஏற்று இந்தியா ஏமாந்துவிடக் கூடாது என்றும் எச்சரித்தார்.

தமிழகச் சட்டப்பேரவையில் நவ-14 அன்று மீண்டும் இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி கூறியதாவது:

கடந்த 12ம் தேதி ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அனுப்பினோம். தீர்மானத்தை உளத் தூய்மையுடன் நிறைவேற்றி அனுப்பினோம்.

ஆனால், தமிழர்கள் எப்போதும் எப்படி இருப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக நாம் 12-ம் தேதி காட்டிய ஒற்றுமைக்கு மாறாக இன்று (நவ-14 அன்று) மாறுபட்டு செயல்படுகிறோம். அதற்காக நான் வேதனைப்படுகிறேன்.

இந்தியாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வந்து பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்தப் பிறகு வெளியிட்ட கருத்துக்கள் குறித்து இங்கே எதிர்க்கட்சித் தரப்பில் பேசியிருக்கிறீர்கள். இதற்கு உன்னுடைய பதில் என்ன என்று என்னை கேட்டிருக்கிறீர்கள்.

எப்படியோ என்னை தில்லியில் உள்ள ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளதாக பாவித்து, உன் பதில் என்ன என்று கேட்டதற்கு நன்றி.

என் உயரம் என்ன என்பதை அறிந்துள்ளதால் அதற்கு உட்பட்டே இங்கு பதில் சொல்ல விரும்புகிறேன்.

இலங்கை அதிபரின் கருத்துக்களை இந்தியா எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் தொடர்ந்து வேண்டுகோள் விடுவது நமது கடமை.

அன்று (12ம் தேதி) வேகமாக பேசத் தவறிய ஓ.பன்னீர்செல்வம் இன்று வேகமாக பேசி, எப்போது ராஜினாமா? என்று கேட்டார். அந்த வேகத்தை பாராட்டுகிறேன்.

தமிழருக்கு தீங்கு ஏற்பட்டால் அதை சகித்துக் கொண்டு பதவியில் இருக்கக் கூடிய
அளவுக்கு எங்களுக்கு பதவி வெறி இல்லை.

அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்ட தீர்மானத்தின்படி நாங்களும், பாமகவும் மட்டுமே தயாராக இருந்தோம். மற்ற கட்சிகள் தங்கள் தலைமையை கலந்து பேசிதான் ராஜினாமா செய்ய முடியும் என்று கூறிவிட்டன. அதன்பிறகு இலங்கையில் பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்றுவிட்டன.

தற்போது இலங்கை அதிபர் முடிந்த முடிவாக தீவிரவாதிகளான விடுதலைப் புலிகளை சரணடைய செய்வது அல்லது அடக்குவது ஒன்றுதான் முக்கிய நோக்கம்; குறிக்கோள் என்று அறிவித்துவிட்டார்.

தமிழர்களை காக்கும் பொறுப்பை நான் தட்டிக் கழிக்கமாட்டேன் என்றும் ராஜபக்சே சுவைபட சொல்லியிருக்கிறார். தமிழர்களை ஏமாற்ற முடியும் என்ற கருத்தில்தான் அவர் அப்படி சொல்லியுள்ளார்.

மத்திய அரசு இதனை தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். இலங்கைப் பிரச்சனையை ராஜபக்சே இரண்டாக பிரித்துப் பார்க்கிறார். தமிழர்கள் மீது எங்கள் படை செல்லாது, குண்டு வீசாது. ஆனால் விடுதலைப் புலிகளுக்கு நாங்கள் ஆதரவு தரமுடியாது என்று அவர்கள் நடத்துகிற யுத்தத்தையே இரண்டாக பிரித்து சொல்கிறார்.

இதனை மிக எச்சரிக்கையாக கையாள வேண்டும் என்று பிரதமரையும், சோனியா காந்தியையும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் என்றால் எப்படி அதை அணுக வேண்டுமோ, அப்படி அவர்களை அணுக வேண்டும். முதலில் தமிழர்கள் மீது குண்டுமழை பொழிவதை நிறுத்த வேண்டும். தமிழர் பகுதிகளில் வீடுகள், ஆலயங்கள் எதுவுமே தாக்குதலுக்கு ஆளாகக் கூடாது. இதற்கு ராஜபக்சே உத்தரவாதம் தருவதற்கு தயாராக இல்லை.

விடுதலைப் புலிகள் மீது குண்டு வீசினால் இலங்கைத் தமிழர்கள் மீதும், இவர்கள் மீது குண்டு வீசினால் விடுதலைப் புலிகள் மீதும் நிச்சயம் விழும். இரு பிரிவினரையும் ஒரு சேர அழிக்க ராஜபக்சே யுத்தம் புரிகிறார்.

அவர் கெடு கேட்டதன் நோக்கம் புரிகிறது. இதில் பிரதமர் ஏமாந்துவிடக் கூடாது. இந்தியா உட்பட எல்லா நாடுகளிலுமே தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அவர்களை அழிப்பதற்காக அந்த நாட்டு மக்களின் மீது குண்டு மழை பொழிகிறார்களா?

இதை பிரதமர் இந்தியாவின் சார்பாக, இங்கே வேதனைப்படும் தமிழர்களின் சார்பாக இலங்கைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படி எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்காவிட்டால் பிறகு என்ன நடவடிக்கை என்பதை நாங்கள் யோசிப்போம் என்று பிரதமர் கூறவேண்டும். அதன் பிறகு நம்முடைய எண்ணங்கள் நிறைவேற நாம் என்ன செய்யலாம் என்று சிந்திப்போம்.

அறப்போர் மீது நமக்கு எப்போதுமே அக்கறை உள்ளது. காந்தி, பெரியார், அண்ணா காலம் முதல் அறப்போர் முறையை நாம் அறிந்துள்ளோம். அதில் வெற்றியும் பெற்றுள்ளோம். அந்த முறையில் தமிழர் நலன் காக்க பாடுபடுவோம். அந்த வழியில் ஓ.பன்னீர்செல்வம்
கருத்துப்படி பதவியை துறக்க தயார் என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார். 

நன்றி -(டிஎன்எஸ்)
Nov 14, 2008